உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடையில் குவிந்த பயணிகள்

கொடையில் குவிந்த பயணிகள்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கும் மேகக்கூட்டம், சூறைக்காற்று என ரம்மியமான சூழல் நேற்று நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி