உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர்களில், ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களில் இலங்கை மற்றும் நைஜீரிய நாட்டவர்களும் அதிகளவில் இருப்பது, போலீசார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்திற்குள், கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலில், ஆந்திரா, கேரளா என, 11 மாநிலங்களை சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல, இலங்கை, நைஜீரியா, சூடான், செர்பியா, கென்யா, கானா, தான்சானியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், 'சிந்தடிக்' எனும் மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், ஹெராயின், கோகைன், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.சர்வதேச போதைப்பொருள் கும்பலின், 'நெட்ஒர்க்' குறித்து, இ.பி.சி.ஐ.டி., எனும் அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தலில் கைதான வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து ஆய்வு செய்ததில், ஒடிசா, ஆந்திரா, மற்றும் கேரள மாநிலத்தவர்களும், நைஜீரியா, இலங்கையை சேர்ந்தோரும் அதிகம் இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் கைதான வெளி மாநிலத்தவர்கள்மாநிலம் கைது சிறையில் ஜாமினில் தலைமறைவு பிடியாணையில்ஆந்திரா 447 62 340 21 24கேரளா 662 109 540 6 7ஒடிசா 892 109 760 4 19பீஹார் 386 22 359 3 2மேற்கு வங்கம் 322 25 292 4 1அசாம் 133 9 122 1 1உ.பி., 63 6 56 0 1ஜார்க்கண்ட் 45 6 39 0 0திரிபுரா 111 9 94 1 7கர்நாடகா 143 25 112 6 0புதுச்சேரி 103 1 102 0 0மொத்தம் 3,307 383 2,816 46 62 2020 முதல் 2025 செப்டம்பர் வரையிலானஐந்து ஆண்டுகளில் கைதான வெளிநாட்டினர்நாடுகள் எண்ணிக்கைஇலங்கை 21நைஜீரியா 31சூடான் 3தான்சானியா 1அமெரிக்கா 1செர்பியா 1செனகல் 2உகாண்டா 1கென்யா 1கானா 1ருவாண்டா 1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rathna
அக் 15, 2025 18:34

சில மாநிலத்தவர்கள் கடத்தி பல மாநிலங்களில் விற்பனை நடக்கிறது. பண புழக்கம் உள்ள சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் அதிக விலை போதை பொருட்கள் அதிகம் விற்பனை. வருமானம் இல்லாத இரண்டாம் தர நகரங்களில், கிராமங்களில் கஞ்சா, கீழ் தரமான விலை குறைந்த மாத்திரைகள், உயிரை குடிக்கும் மெடிக்கல் ஷாப் மருந்துகள் அதிகம் விற்பனை ஆகிறது. மத மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதது, முறை இல்லாத கல்வி, பணத்தை தொலைத்து வாழ்க்கையை தேடும் இளைஞர்கள் இதற்கு அடிமையாக காரணம். அதிக அளவு கடற்கரை பிரதேசம், இலங்கை, மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள விற்பனை கேந்திரமும் இதற்கு அதிக காரணம். அதிக அளவு ஆப்பிரிக்கர்களை நாட்டில் நுழைய விடுவதும், பங்களாதேஷிகள், பாகிஸ்தானிகளை உள்ளே விடுவதும் இதற்கு மிக பெரிய காரணம்.


Rathna
அக் 15, 2025 18:23

அதிலும் மர்ம நபர்களே 80%.


ramesh
அக் 15, 2025 13:08

தமிழ் நாட்டில் 1981 MGR தான் மதுவிலக்கை எடுத்துவிட்டு சாராயம் மற்றும் கள்ளு கடைகளை ஏலம் விட்டார் . பிறகு 1983 இல் TASMAC ஐ ஆரம்பித்தார் . ஜெயலலிதா அரசாங்கமே மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என்று கூறி தனியாருக்கு ஏலம் விடுவதை நிறுத்தி விட்டு அரசே விற்பனை செய்ய ஆரம்பித்தது . இது வரலாறு


Venugopal S
அக் 15, 2025 12:11

பொய், பொய் இதை எல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம் ,ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 15, 2025 10:58

தமிழர்கள் போதைப் பொருட்களை மற்ற மாநிலங்களுக்குத்தான் கடத்துகிறார்கள், தமிழ்நாட்டுக்கு அல்ல என்பதை இப்படி மறைமுகமாக சொல்லிக்காட்டுகிறார்கள்


Madras Madra
அக் 15, 2025 10:31

ஆமாம் கடத்தல் முதலாளிகள் தமிழகத்தில்தான் அதிகம் போல


Shekar
அக் 15, 2025 09:33

சத்து மாவு தயாரிப்பு அப்படின்னு வீடுகளை வாடகைக்கு எடுத்து உற்பத்தி செய்வதுதான் எங்க வேலை. டிஸ்ட்ரிபியூஷன் அவங்க பாத்துக்குவாங்க


suresh Sridharan
அக் 15, 2025 08:40

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் ஏனென்றால் மந்திரி மந்திரி சபை எல்லாம் தெலுங்கு தான்


Jay Al
அக் 15, 2025 08:34

சிறு பாண்மை மதத்தவர்க்ளே ஆதிக்கம் அதிகம்


Barakat Ali
அக் 15, 2025 08:14

இப்படித்தான் சொல்லுவோம் .... ஏன்னா ஜாஃபர் சாதிக் நெட்வொர்க்குல நாங்க இருக்கோம் .... இப்படிக்கு டுமீலு நாட்டு ஏவலு துறை .....


RAMAKRISHNAN NATESAN
அக் 15, 2025 09:40

The West Bengal Police on Tuesday arrested the classmate of the medical student who accompanied her on the night she was raped in a forest in Durgapur area. The classmate, Wasif Ali, is the prime accused in this case and had raped her when she went out with him for dinner, as per the survivors complaint. கைதான அறுவரில் அதாங்க ஆறு நபர்களில் ஐந்து பேர் உங்க ஆளுங்க... அதாவது ஹிந்து ஆண்களுக்கு நார்கோடிக்ஸ்... பெண்களுக்கு லவ்வு சிக்காத்து .... இப்படிப்போகுது உங்க பொழப்பு ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை