உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமல் சொல்வதை மக்கள் கவனிக்க மாட்டார்கள்: அண்ணாமலை

கமல் சொல்வதை மக்கள் கவனிக்க மாட்டார்கள்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ராஜ்யசபா எம்பி கமல் சொல்வதற்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கரூர் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ஆய்வு செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lodfr348&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு அவர் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு என்று யார் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியும். விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லும் என்றார்.இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: அண்ணாமலை கூறியதாவது: ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக கமல் , நீண்ட காலத்துக்கு முன்பே தனது ஆன்மாவை விற்றுவிட்டார். இதனால், கமல் என்ன பேசினாலும் அதனை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்போவது கிடையாது. முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். கரூருக்கு சென்று நிர்வாகத்தின் தோல்வி இல்லை என்று அவர் கூறுவதை யார் ஏற்றுக் கொள்வார்கள். கமல் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசியலை பொறுத்தவரை அவர் என்ன பேசினாலும் அது ஒரு தலைபட்சமானது என்பதை நாம் அறிவோம். கரூர் போன்ற பிரச்னைகளில் கூட அவர் திமுகவை ஆதரிக்கிறார். திமுக மீது தான் தவறு என்பதை அனைவரும் அறிவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

pmsamy
அக் 08, 2025 07:02

அதனால தாண் ....


Raja
அக் 08, 2025 02:03

உன் பேச்சை மட்டும் கேட்பார்களா என்ன ..நீ நேரத்துக்கு நேரம் மாத்தி பேசுவ திடீர்னு சொல்வ த வெ க வுக்கு நான் என்ன மார்க்கெட்டிங் utive ஆன்னு கேட்ப ..அப்புறம் மேலிடத்தில் இருந்து கூட்டு ந உடனே விஜய் க்கு வக்காலத்து வாங்குவ


மணிமுருகன்
அக் 08, 2025 00:32

அருமை


KRISHNAN R
அக் 07, 2025 22:24

கமல் பேச்சு அவருக்கே புரியாது


T.sthivinayagam
அக் 07, 2025 21:26

நீங்கள் சொல்வதை மக்கள் கவனிப்பதாக உங்களுக்கு ஒரு நினைப்பா..


Narayanan Muthu
அக் 07, 2025 20:32

கமல் சொல்வதை மக்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பது வேறு. ஆனால் அண்ணாமலை பேசினால் மக்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்கிறார்கள். சங்கிகளை தவிர வேறு யாரும் சீரியஸ் ஆகா எடுத்துக்கொள்வதில்லை. பொதுவாக மக்களுக்கு அண்ணாமலை ஒரு பொழுதுபோக்கு.


Ram Gandhi
அக் 07, 2025 21:36

அண்ணாமலை லெஜெண்ட்


Rajan A
அக் 07, 2025 20:09

நாங்களே கவனிக்கவில்லை. இதற்கு எதற்கு பதில்


R. SUKUMAR CHEZHIAN
அக் 07, 2025 19:41

கமல் நடித்து பேசுவதை சினிமாவில் பார்த்து ரசிக்கலாம் அரசியல் அல்லது நிஜ வாழ்க்கையில் பேசுவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் காரணம் பேசுவது புரியாது. அப்படியே புரிகிறது என எவராவது கூறினால் அவருக்கு ரொம்ப முத்தி போச்சு என்று அர்த்தம்.


Raj Kamal
அக் 07, 2025 19:25

கமல் அவருடைய பணத்தை கொண்டு உதவுகிறார். இந்த சம்பவத்தில் குறை சொல்வதை தவிர உங்கள் பங்கு என்ன?


திகழ்ஓவியன்
அக் 07, 2025 19:10

பால் பண்ணை புது பணக்காரரே உன் நிலையும் அதே தான் , ஒருத்தன் ஏன் உன்கட்சியில் உள்ளவர்கள் தான் உன்னை பற்றி அவதூறு வெளி வருகிறது