உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக, கிண்டி போலீசார், நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத், 42, என்பவனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவனின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இவன் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2025 19:06

பொறந்த நாளைக்கு வெளியே வரலைன்னா பத்து வருஷம் தண்டச்சோறு நிச்சயம் .....


சிட்டுக்குருவி
நவ 12, 2025 19:04

இப்போதெல்லாம் சிறைவாசம் என்பது செலவில்லாமல் சொகுசு பங்களாவில் இருப்பதைப்போன்றது .ஏல்லாவசதிகளைம் பெறமுடிகின்றது .விதவிதமான உணவுவகைகள் வேறு என்னவேண்டும் .வெளியில் இருந்தால் நம்ம காசு செலவு .அதனால்தான் குற்றங்கள் ஒரு பொருட்டே அல்ல .யாராவது விடுதலையாகும் போது 16 வயதினிலே கார்த்திக் சோர்ந்து உடல் மெலிந்து மனம் நொந்து கட்டைவண்டியில் வருவதை போன்ற காட்சியை பார்த்திருக்கின்ரீர்களா ?குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கு பழையகாலத்தில் போன்று களிமட்டுமே உணவாக அளிக்கவேண்டும் .மக்கள் வரிப்பணத்தில் சிறையில் சொகுசுவாழ்க்கைக்கூடாது .மறுபடியும் நாம் சிறைக்குவரக்கூடாது என்ற மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கவேண்டும் .


RK
நவ 12, 2025 18:59

போராளிக்கு வந்த அதிர்ச்சி வைத்தியம்.


Sundar R
நவ 12, 2025 18:43

At present, a large number of Criminals and Anti-social Elements are roaming in our Tamil Nadu State. If they out-number the genuine people, the people cant live with gripping fear everyday. For their safety, they have no other option except to retreat themselves with their family members to deep caves or huge mountains.


GMM
நவ 12, 2025 18:40

அரசியல் சாசன கவர்னர் பதவிக்கு மதிப்பளித்து, இந்த தண்டனை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும்.


nagendhiran
நவ 12, 2025 18:35

பத்தல?


G Mahalingam
நவ 12, 2025 18:34

கவலை வேண்டாம். அண்ணா கருணாநிதி பிறந்த நாளில் விடுதலை ஆகி விடலாம்.


sivakumar Thappali Krishnamoorthy
நவ 12, 2025 17:59

அண்ணா பிறந்த நாளில் விடுதல.


Shekar
நவ 12, 2025 17:58

அய்யகோ, ஒரு நீட் போராளிக்கு இப்படி ஒரு தண்டனையா?


RRR
நவ 12, 2025 17:50

குற்றவாளியை கட்டித்தழுவி பாராட்டுவார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை