உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

நமது நிருபர்

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில், தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9cb3gvmn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை: 8.27 லட்சம் பேர்; மொத்தம் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகம்.

மாணவிகளே அதிகம்

மொத்தம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி: 95.20 சதவீதம்மாணவர்கள் 93.19 சதவீதம் பேர் தேர்ச்சி, மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

'டாப் 5' மாவட்டங்கள்

1. ஈரோடு- 98.87 சதவீதம்2.சிவகங்கை-98.05 சதவீதம்3.கன்னியாகுமரி- 97.63 சதவீதம்4.திருநெல்வேலி-97.84 சதவீதம்5.திருச்சி-97.50 சதவீதம்

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்

2,639 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 489 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.* அரசுப் பள்ளிகள்- 92.16% * அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 96.14%* தனியார் பள்ளிகள்-98.72%* இருபாலர் பள்ளிகள்-95.30%* பெண்கள் பள்ளிகள்- 97.08%* ஆண்கள் பள்ளிகள்-90.49%

100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!

* தமிழ்- 83 பேர்* ஆங்கிலம்- 21 பேர்* இயற்பியல்- 105 பேர்* வேதியியல்- 632 பேர்* கணிதம்- 732 பேர்* உயிரியல்- 784 பேர்* விலங்கியல்- 18 பேர்* தாவரவியல்- 31 பேர்* கணினி அறிவியல்- 6,945 பேர்* வணிகவியல்- 683 பேர்* கணக்குப் பதிவியல்- 1946 பேர்* பொருளியல்-440 பேர்

ஆண்டு வாரியாக தேர்ச்சி விவரம்

கடந்த 5 ஆண்டுகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:* 2026- 95.20 சதவீதம்* 2025-95.03 சதவீதம்* 2024- 94.56 சதவீதம்* 2023- 94.03 சதவீதம்* 2022- 93.76 சதவீதம்

திருப்பூர் 11வது இடம்

சிவகங்கை மாவட்டம் 98.05% பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை; கடந்த ஆண்டில் 6ம் இடத்தில் இருந்து தற்போது 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், இந்தாண்டு 8 இடங்கள் பின்தங்கி, 97.03 சதவீத தேர்ச்சி பெற்று 11வது இடம் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 31 இடத்தில் இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் 21ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

துணைத் தேர்வுகள்

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13ம் தேதி முதல் வழங்கப்படும். 12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெறாத மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

சிறைகைதிகள்

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய 250 சிறை கைதிகளில் 238 பேரும், 8,855 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட்டது. 'www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in' ஆகிய இணையதளங்களில், மாணவர்களின் பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.வாட்ஸாப்பில், 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என செய்தி அனுப்பி, துறையின் பெயர் என வந்ததும், 'Directorate of Government Examinations' பிளஸ் 2 என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின், மாணவரின் தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால், ரிசல்ட் அறிந்து கொள்ள முடியும். மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஆலோசனை மையங்களில், '14417, 104, 14416' என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவர்கள் உற்சாகம்வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kannan Chandran
மே 08, 2026 11:11

சிந்தனை திறனை ஊக்குவிக்கும் கல்வி கொள்கைக்கு மாற வேண்டும், ஏளிமை என்ற பெயரில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை சீரழிக்க வேண்டாம், சாய்ஸ் இல்லாமல் அனைத்து கேள்விக்கும் பதில் தெரிந்தால் ஒழிய நூற்றுக்கு நூறு என்பது தேவையற்றது


Duruvan
மே 08, 2026 10:51

வருங்கால செல்வ பெருந்தகைகள் அறிவு புரட்சி


தங்கவேல்
மே 08, 2026 10:09

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் மனம் தளர வேண்டாம் அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றைக்கும் முயற்சியை கைவிடாமல் எந்த செயலை செய்தாலும் நிச்சயம் அதன் பலனும் வெற்றியும் நமக்கு கிட்டும்


தங்கவேல்
மே 08, 2026 10:08

வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் பல வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை