உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி பலாத்கார வழக்கு கைதானவரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

சிறுமி பலாத்கார வழக்கு கைதானவரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட வடமாநில நபரை, நான்கு நாள் காவலில் விசாரிக்க, திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமி, கடந்த 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை, கடந்த 25ம் தேதி, போலீசார் கைது செய்தனர். கடந்த 26ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன், அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆக., 9ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை, ராஜு பிஸ்வகர்மாவை, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி உமா மகேஸ்வரியிடம் ஆரம்பாக்கம் போலீசார் மனு அளித்தனர். நேற்று பலத்த பாதுகாப்புடன் குற்றவாளியை ஆஜர்படுத்தினர். நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராஜு பிஸ்வகர்மாவை ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 30, 2025 10:09

கடந்த 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் அண்ணனால் சாவகாசமாக 30ம் தேதி போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு என்னவேகம் ..என்ன வேகம் ..கோர்ட் , வாய்தா ..என்று இழுத்தடித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அடுத்த ஜென்மத்தில்தான் நீதி கிடைக்கும் ..


AMMAN EARTH MOVERS
ஜூலை 30, 2025 09:17

தமிழ் நாட்டிற்குள் இந்த பீடா வாயன்களை நுழைய விட்டதின் விளைவுதான் இது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 30, 2025 13:04

அப்படியானால் தமிழகத்தில் நடந்த அத்தனை பாலியல் வன்கொடுமைக்கும் பீடாவாயன்கள் தான் காரணமா??? அடுத்த மொழி மீதும், வடநாட்டவர் மீதும் இவ்வளவு வன்மம் தேவையில்லை....!!!


புதிய வீடியோ