உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி

கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி

அரியலுார்: கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டினார். ஜூலை27ம் தேதி, ஆடித்திருவாதிரை நட்சத்திர தினத்தில் அவரது பிறந்த நாள். இந்நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும், என்று கடந்த 2021ல் தமிழக அரசு உத்தரவிட்டு, விழா நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdme7gvl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அரியலுார் கலெக்டர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி., தீபக் சிவாச் உள்ளிட்ட அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் விழா நடக்கவுள்ள இடத்தை, பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீஸ் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Barakat Ali
ஜூலை 19, 2025 20:42

திராவிட மாடலுக்கு எரியுமே ????


V.Mohan
ஜூலை 11, 2025 12:57

திராவிட விடியல் தலீவர்களாலும் 200 ரூபா உ.பிஸ் களாலும் எதைப்பேசினாலும், எதைச் செய்தாலும் "பிரதமர் மோடி மற்றும் பாஜக வின் நினைப்பை தவிர்க்கவே முடியல" நல்லது செஞ்சு நியாயமாக இருக்கறவங்களை "விடியல்" போன்ற வெட்டிப்பேச்சு வீரர்களால சமாளிக்கவே முடியாது. இது 100 க்கு 100 உண்மை


Mohdgilani
ஜூலை 11, 2025 11:39

திரு மோடி அவர்கள் வரவு நல்வரவு ஆகட்டும்


venugopal s
ஜூலை 11, 2025 10:45

நல்லா இருந்த ஊர், என்ன ஆகப் போகிறதோ?


Shekar
ஜூலை 11, 2025 11:37

கங்கை சுத்தமாவது சிலவற்றிற்கு பிடிக்காது


vivek
ஜூலை 11, 2025 11:51

அது ஏற்கெனவே திமுக ஆட்சியில் கேடு கேட்டு போயிடிசி


Mettai* Tamil
ஜூலை 11, 2025 13:04

ஊழல் நிறைந்த ஊர், என்ன ஆகப் போகிறதோ?


Anand
ஜூலை 11, 2025 13:07

உன்னை போல் ...க்கள் இந்நாட்டை விட்டு ஓடிவிட்டால் தான் நாடு முழு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்...


inamar
ஜூலை 11, 2025 10:28

இந்த திரவிஷ திருடர்களுக்கு பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார் என்றால் பயம் தொற்றிக்கொள்கிறது.. எதையாவது சொல்ல வேண்டியது.. அந்த பாலம் காட்டியது காங்கிரஸ் என்பது எதனை பேருக்கு தெரியும்


sankaranarayanan
ஜூலை 11, 2025 10:19

திராவிட மாடல் அரசின் முதல்வரும் புள்ளையாண்டானும் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று கருணாநிதி சிலை திறக்க நேரம் இருக்கிறது அனால் தமிழன் தமிழ் நாட்டை ஆண்டவன் பிறந்த தினத்தை கொண்டாட அவர்களுக்கு நேரமில்லை தெரியவும் இல்லை கொண்டாடுபவர்களை போற்றவும் இல்லை அதற்கு மாறாக கொண்டாடுபவர்களை ஏளனம் செய்யத்தான் முன் வருவார்கள் என்ன அரசுடா இது


Arjun
ஜூலை 11, 2025 10:04

40 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் கட்டியது காங்கிரஸ் ஆட்சியில். 16 கோடியில் தடுப்பணை என்று ஒன்று கட்டினார்கள். 3 மாதத்தில் அது காணமல் போய்விட்டதே திராவிட மாடலில்.


Kalyanaraman
ஜூலை 11, 2025 10:03

பிரதமரின் இந்த வருகையின் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உலக பிரசித்தி பெற்று உள்நாட்டு & வெளிநாட்டினரின் வருகையை அதிகரிக்கும். முக்கியமாக நமது வரலாறு உலகம் முழுவதும் பேசப்படும்.


rameshkumar natarajan
ஜூலை 11, 2025 09:58

Tamil Nadu elections are round the corner. Now, he will start comming to tamilnadu and start speaking great of tamil langauage.


Vaduvooraan
ஜூலை 11, 2025 10:52

அதுல என்ன தப்பு? அனுமதி பெற்றுதான் தமிழகத்துக்கு வரணுமா என்ன?


Raman
ஜூலை 11, 2025 11:46

Rs 200s are for ever Is not it?


மணியன்
ஜூலை 11, 2025 09:47

குஜராத்தில் பாலம் இடிந்ததை சொல்லி இங்கு லஞ்சம்,ஊழலில் சிக்கி சீரழியும் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை