உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேபிஸ் நோயால் 16 பேர் உயிரிழப்பு: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

ரேபிஸ் நோயால் 16 பேர் உயிரிழப்பு: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

சென்னை : தமிழகத்தில் இந்தாண்டில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்டு, 16 பேர் உயிரிழந்துள்ளனர்.'ரேபிஸ்' தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு, ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களைப் பொறுத்தவரை பிறந்த முதல் ஆண்டில், இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசி போடுவது அவசியம்.ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாகச் செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை அவை கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்துகிறது.கடந்தாண்டில், 22 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டில் மட்டும் இதுவரை, 16 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலர் டாக்டர் வடிவேலன் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும், 5,000க்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. அத்தகைய வைரசால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது.இந்தாண்டில், கோவையில் மூவர்; திருப்பூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சியில் தலா இருவர்; ஆத்துார், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், சென்னையில் தலா ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சிலர், நோய் பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.மாநிலம் முழுதும் உள்ள மருத்துவமனைகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தெருநாய்கள், செல்லப்பிராணி கடித்தவர்களுக்கு, நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28வது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஆழமான காயமாக இருந்தால், அந்த இடத்தில், 'இம்யூனோக்ளோபுலின்' தடுப்பூசி கூடுதலாகச் செலுத்தப்படுகிறது.அந்த வகையில், ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாமல், உரிய காலத்தில் சிகிச்சை பெறாமல் இருந்தவர்கள் தான் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A.Muralidaran
ஜூன் 20, 2024 10:57

ஹா ஹா ஹா


Nagercoil Suresh
ஜூன் 20, 2024 09:03

சென்னையில் வாக்கிங் போகுலாம்னு பார்த்தா ரன்னிங் தான் போக்கவேண்டியதிருக்கிறது.


VENKATASUBRAMANIAN
ஜூன் 20, 2024 08:20

மாநகராட்சி தூங்குகிறதா.


Svs Yaadum oore
ஜூன் 20, 2024 06:33

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாம் ...இந்த ரேபிஸ் தடுப்பூசி மட்டும் இந்தியாவில் பல ஆயிரம் கோடிகள் வர்த்தகம்.. பல நூறு கோடிகள் கைமாறுது ... ஊரெங்கும் தெரு நாய்கள் பெருக்கத்தின் ரகசியம் இதுதான் ... எல்லாம் லஞ்ச ஊழல் ...தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் அதை பல் மடங்கு பெருக்க விட்டு பிறகு அதற்கு தடுப்பூசி கொள்முதல்.....பிறகு தெரு நாய் கடித்து விட்டது என்று அந்த நாய்களை அடித்து துன்புறுத்துவது என்ன நியாயம்? ஆறறிவு மனிதன் மூடத்தனத்திற்கு ஐந்தறிவு பிராணி பலியாகுது ....


Kasimani Baskaran
ஜூன் 20, 2024 05:55

கள்ளச்சாராயத்தை விட இறப்பு எண்ணிக்கை குறைவு... ஆகவே இதற்காக சர்வாதிகாரியாக மாறவேண்டிய அவசியம் இல்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை