உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்

 ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்

சென்னை: ரயில் பயணியரின் கோரிக்கைகளை ரயில்வே கவனத்திற்கு எடுத்து செல்ல, தமிழகம் முழுதும் பல்வேறு ரயில் பயணியர் சங்கங்கள், மாவட்ட, மாநில அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து, தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளன. இதன் தலைவராக சுப்பிரமணியன், பொதுச்செயலராக நஜிப் இசக் கனி, பொருளாளராக ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கூட்ட மைப்பின் தலைவர் சுப்பிர மணியன் கூறியதாவது: பயணியர் தேவைக்கு ஏற்ப ரயில்களை அதிகரிக்க, ரயில்வே துறையிடமும், ரயில் பாதைகளுக்கு நிலம் கையகப்படுத்தி தரும்படி, தமிழக அரசிடமும் வலியுறுத்துவோம். பயணியர் அதிகம் உள்ள இடங்களில், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்த வசதி, குறுகிய துார ரயில்களின் சேவையை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் ரயில்களின் சேவை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ரயில்வே கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N DHANDAPANI
ஆக 13, 2026 09:48

இது ஒரு டுபாக்கூர் கூட்டமைப்பாக இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பு இருக்கிறது விசாரித்து விடுங்கள்


ellar
ஆக 13, 2026 09:47

எங்கள் மனம் நிறை தினமலர் நாளிதழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் மக்கள் பணியில் உங்கள் பங்கு மகத்தானது ஆனால் இம்மாதிரியான கூட்டமைப்பு என்று ஒன்று வரும் பொழுது அதனுடைய தலைமையின் உடைய பின்னணி என்ன இதுவரை அவர்கள் சாதித்தது என்ன என்பது தங்களால் சேகரிக்கப்பட்டு அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எவ்வாறு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவரைப் பற்றிய விவரங்கள் போடுகிறீர்களோ அதுபோல போட்டு வந்தால் ஏற்கனவே இவ்வாறு கூட்டமைப்பு என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றும் தலைவர்கள் மனித உரிமைகளை கூறி மக்களை ஏமாற்றும் தலைவர்கள் உருவாகாமல் இருப்பார்கள் இதுவும் தங்கள் பணி என்பதை எடுத்து இயம்ப விரும்புகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை