உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மகனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

 மகனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

சென்னை: பா.ம.க., தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ம.க.,வில், கட்சி தலைமைக்கான உரிமை தொடர்பாக, நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், இரண்டு அணியாக கட்சி செயல்பட்டது. தன்னை பா.ம.க., தலைவராக அறிவிக்க கோரியும், பா.ம.க.,வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், ராமதாஸ், அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்டு, கட்சியும் ஒன்றிணைந்து உள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக, ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன் சு.
ஜூலை 23, 2026 13:27

ஒரு குடும்பக் கட்சியின் குடும்ப உறுப்பினர்களை நம்பி மோசம் போன உண்மையான தொண்டர்களைப் பார்த்து "அட தற்குறிகளே" என்று சிரிப்பதா அல்லது "பாவம்பா நீங்களெல்லாம்" என்று அழுவதா என்று தெரியவில்லை.


Dominic
ஜூலை 23, 2026 10:22

ஆடி கத்தில் அம்மியே பறக்கும்போது, ரா மாடாஸ், அன்புமணி பத்தராகிவிட்ட்னர். மக்கள் மறந்த தலைவர். இது கருணாநிதி காலம் அல்ல, பொட்டி & பேரம் & uzhal,. மந்திரி பதவி & வன்னி பாவங்கள் ஏமாத்து தொடர் கதை. முடிந்தது .மக்களை ஏமாத்திய காலத்துக்கு நல்ல முடிவு வந்துழலது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை