உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொரட்டி காளகத்தீசுவரர் கோவிலில் ராமாயண ஓலைச்சுவடி கண்டெடுப்பு

கொரட்டி காளகத்தீசுவரர் கோவிலில் ராமாயண ஓலைச்சுவடி கண்டெடுப்பு

சென்னை : திருப்பத்துார் மாவட்டம், கொரட்டி காளகத்தீசுவரர் கோவிலில், வால்மீகி ராமாயண ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம் கண்டிலி ஒன்றியம், கொரட்டி என்ற கிராமத்தில் உள்ள காளகத்தீஸ்வரர், ஞான பிரசூனாம்பிகா கோவில் திருப்பணியின் போது, ராஜகோபுரத்தில் ஐந்து சுவடிகளை, திருப்பத்துார் சரக ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி கண்டெடுத்தார். அவர், ஹிந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு தகவல் தெரிவித்தார். அவற்றை பராமரித்து பாதுகாக்கும்படி, சுவடித் திட்ட பணி பொறுப்பாளரும் இணை கமிஷனருமான ஹரிப்ரியா, சுவடித் திட்டப்பணி குழுவினரை அனுப்பி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, சுவடி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைபாண்டியன் கூறியதாவது:

பிரசூனாம்பிகாக சமேத காளகத்தீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சுவடி கட்டுகளை, கடந்த, 21ம் தேதி ஆய்வு செய்தோம். அவற்றில், 2,075 ஏடுகள் உள்ளன. அவற்றில் உள்ள குறிப்பு மற்றும் எழுத்து வடிவின் அடிப்படையில், 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, வழிச்சுவடி மரபைச் சேர்ந்தது. அதாவது, கிருஷ்ண கவுண்டரும், பள்ளிக்கொடுத்தான் என்கிற கோவிந்தசாமி கவுண்டரும் சேர்ந்து எழுதிய சுவடிகளை பார்த்து, புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் படி எடுத்துள்ளார். அதன்படி, மூலச்சுவடிகள், 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். இந்த சுவடிகளில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, வசன நடையில் மிக விரிவாக, 'ஸ்ரீ ராமாயணக் கதை' என்ற பெயரில் எழுதப்பட்டு உள்ளது. இதில், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவை மட்டும் உள்ளன. இவற்றில் பல ஏடுகள் காணப்படவில்லை. இவை, பல ஆண்டுகளாக சுற்றப்பட்ட நிலையிலேயே இருந்ததால், பூஞ்சை படிந்து உள்ளன. அவற்றை சுத்தப்படுத்தி, வேதியியல் பராமரிப்பு செய்கிறோம். இது, சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் கலக்காத வசன நடையில், பொது மக்கள் படித்து புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளது. அதனால், இவற்றை பிரதியெடுத்து, பதிப்பிக்கலாம். அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தால் அதை செய்யலாம். மேலும், சிவன் கோவிலில், ராமாயணம் ஓலைச்சுவடி கிடைத்திருப்பதற்கான ஆய்வையும் செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எவ்வளவு?

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், 43,762 கோவில்கள் உள்ளன. அதேபோல, பழமையான மடங்களும் நிறைய உள்ளன. அவற்றில், நம் வரலாற்றை தாங்கிய செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இதுவரை, 1,771 கோவில்களில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றிலேயே, ஒரு லட்சத்து, 78,000 சுருணை ஓலை ஆவணங்கள், 390 இலக்கிய சுவடிகள், 95 செப்பேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 50,028 சுவடிகள் முறையாக பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதுவரை, ஓலைச்சுவடிகளில் இருந்து பிரதியெடுக்கப்பட்டு, ஐந்து நுால்கள் பதிப்பிக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jagan (Proud Sangi)
மார் 28, 2025 02:03

"கிருஷ்ண கவுண்டரும், பள்ளிக்கொடுத்தான் என்கிற கோவிந்தசாமி கவுண்டரும் சேர்ந்து எழுதிய சுவடிகளை பார்த்து, புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் படி எடுத்துள்ளார்."- அப்போ பார்ப்பனர்கள் எங்களை படிக்க விடவில்லை என்பதெல்லாம் பொய்யா கோபால் ???


karthik
மார் 26, 2025 12:58

ராமரே இல்லை என்கிற கும்பல் கையில் இது கிடைத்திருப்பது கொடுமை.. பாதுகாப்பாக இருக்குமோ தெரியாது


ஆரூர் ரங்
மார் 26, 2025 11:25

அநியாயம். பகுத்தறிவு பகலவன் 300 ஆண்டுகளுக்கு முன் இவர்களைப் படிக்க வைத்தார். இவிங்க என்னடான்னா அந்த படிப்பறிவை வெச்சு ராமாயணம் எழுதியிருக்காங்க. எவ்வளவு பெரிய குருத் துரோகம்?


தமிழ்வேள்
மார் 26, 2025 10:55

படியெடுத்தவர்கள், வன்னியர் இனத்தை சார்ந்த கிருஷ்ணா கவுண்டர், கோவிந்தசாமி கவுண்டர். ஆனால் திராவிஷன் புலம்புவது. பார்ப்பனர் எங்களை படிக்கவிடவில்லை ....அப்போது மேற்சொன்னவர்கள் தற்குறிகளா? ராமசாமி வகையறா தமிழனை தற்குறி ஆக்கிவிட்டது ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 26, 2025 08:09

"...இவற்றை பிரதியெடுத்து, பதிப்பிக்கலாம். அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தால் அதை செய்யலாம்..." இதுக்கு எதுக்கு அனுமதி? குறைந்தபட்சம் ஒவ்வொரு சுவடியையும் மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்தால்கூட போதும். அதற்கும் அனுமதி தேவையா என்ன?


Balasubramanian
மார் 26, 2025 07:44

இராமாயணம் ஏன் படித்தும் பரப்பியும் வந்தார்கள்?! மக்களை நல் வழிப் படுத்த! சன் டீவி மாதிரி - நல்ல முயற்சி என்றாலும் - காசு பார்க்க அல்ல!


Appa V
மார் 26, 2025 06:33

திராவிட மாடல் ஆட்சியில் தான் இவைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன ..இந்த சுவடுகள் கிடைத்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும்


V Venkatachalam
மார் 26, 2025 12:27

பத்த வச்சிட்டியே பரட்டை, இவனுங்க உண்மையிலேயே விழா எடுக்கிறேன் பேர்வழின்னு விழாவும் எடுத்து அதுல முடிந்தவரை துட்டும் அடிச்சிடுவானுங்களே..


Keshavan.J
மார் 26, 2025 12:30

ஆமாம் ஸ்டாலினும் உதவநிதியும் அந்த கோயிலுக்கு பொய் இந்த ஓலை சுவடிகள் கண்டு பிடித்தார்கள். அதனால் ஆட்சியாளர்களை பாராட்ட வேணும்.


raja
மார் 26, 2025 06:25

ஆனால் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்டமும் ருவா 200 கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகலும் தமிழன் இந்து என்பதே கிடையாது என்று உருட்டுவானுவோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை