உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

ரேஷன் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறியதாவது: ரேஷன் உணவுப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் தரமாக பாக்கெட்டில் வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில், விற்பனை முனைய கருவியின் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும், பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும். ரேஷன் ஊழியர் களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒருநாள் ரேஷன் ஊழியர்கள், வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மாவட்ட தலைநகரங்களில், ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karuthu kirukkan
ஏப் 08, 2025 08:19

வரும் தேர்தலில் ஒரு வீட்டிலே எதனை பேரு இருக்காங்க என்கின்ற கணக்கை மறக்காம கொடுத்துருங்க அப்புறம் பணம் கொடுக்கிறவங்களுக்கு மறக்காம போட்டுருங்க ..அப்புறம் போராட்டம் பாத்து பண்ணிக்கலாம்.... பின் வரும் தலைமுறை நாசமா போகட்டும்


Ramesh
ஏப் 08, 2025 07:08

மறக்காம திமுகவிற்கு ஓட்டு போட்டுறுங்க


Ethiraj
ஏப் 08, 2025 07:02

Privatise PDS like neighbouring states. Restrict rations only to below poverty line families say 50 lakh cards 5000 private ration shops


Venkateswaran Rajaram
ஏப் 08, 2025 06:51

வேடிக்கையாக இருக்கிறது இந்த ரேஷன் ஊழியர்களின் பிரதான தொழிலே அரிசி கடத்துவது தான். ஆக இந்த திராவிட கொள்ளை அவர்களின் ஆட்சியில் கொள்ளையர்களும் போராட்டம் செய்யலாம் என்று ஆகிவிட்டது


முக்கிய வீடியோ