உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார்: நம்பிக்கையுடன் சொல்கிறார் உதயநிதி

கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார்: நம்பிக்கையுடன் சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கி, பணிகளை மேற்கொண்டுள்ளனர். கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று முன்தினம், நேற்று சென்னையில் கனமழை பெய்தது. அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pjwhsbe1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை தான். இவ்வாறு உதயநிதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Dharmavaan
அக் 18, 2024 10:58

இப்படி வாய் சவடால் அடித்து மக்களை ஏமாற்றும் திருடன் கூட்டம் திருட்டு திராவிட கூட்டம் கட்டுமரம் குடும்பம்


Lion Drsekar
அக் 17, 2024 11:52

பாராட்டுக்கள் முக்கிய பதவியில் இருப்பவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறவேண்டிய முக்கிய வார்த்தைகள், நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம், எதையும் எதிர்கொள்ளத்தயார், எங்களுக்கு இவைகள் எல்லாம் பொருட்டே இல்லை, அப்படியா நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம், அவர்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது, சூழ்ச்சியே காரணம், எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம், நான் , இவைகளை தவிர்த்து வேறு வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்தமாட்டார்கள், வீம்புக்கு வம்புக்கு பேசும் வார்த்தைகள் அது தனி, அவைகள் எழுத்தில் வடிக்கமுடியாதது . வந்தே மாதரம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 16, 2024 22:01

வெகு விரைவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் திரைக்கலைஞர்கள் சார்பிலும் ரஜனி சார்பிலும் அரசு சார்பிலும் மக்கள் தளபதி இளையா நிலா இன்பாவின் தந்தை உதயநிதியாருக்கு மழையில் இருந்து மக்களைக் காப்பாற்றியதற்காகவும் மழையை ஆந்திராவுக்கு திருப்பி விட்டதற்காகவும் அகில இந்திய இன்டி தலைவர்கள் முன்னிலையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெறும்.


raja
அக் 16, 2024 19:50

இன்னுமா தமிழா முன்னாள் நிதி மங்குநியே சொன்ன 30000 கோடி கொள்ளை அடிச்ச கேடி சொல்றத நம்புற....


VENKATASUBRAMANIAN
அக் 16, 2024 18:52

உனக்கென்ன வசதியாக இருப்பாய். மக்கள் தானே கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இப்படியே பொய் சொல்லுங்கள். மக்கள் வெட்கம் இல்லாமல் காசுக்கு உங்களுக்கு ஓட்டு போடுவார்கள்


Rajinikanth
அக் 16, 2024 18:13

Keep up என்றால் நீங்கள் செய்வதை தொடரவும் என்று அர்த்தம். Example: keep up the good work


sundarsvpr
அக் 16, 2024 17:18

கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி குடும்பங்களால் நிச்சியம் முடியும். இவர்கள் மேட்டு குடி மக்கள்


vbs manian
அக் 16, 2024 16:38

கால்வாய் பணிகள் தூர் வரல் சரியாக நடந்திருந்தால் மழை நீர் அதன் போக்கில் ஓடி கடலில் கலந்திருக்கும். எந்த அமைச்சரும் எங்கும் செல்ல தேவையில்லை. இந்த போட்டோ ஷூட்டும் அவசியமில்லை. ஆனால் நிலைமை வேறு. மும்பையிலும் மழை புரட்டி போடுகிறது. இந்த துயரம் இல்லை. வருடா வருட -ம் இங்கு நரகம்


karutthu kandhasamy
அக் 16, 2024 16:01

வெரி குட் keep up இல்லை KEEP IT UP என சரியாக உச்சரிக்கவும் நான் உங்க வார்த்தையை கிண்டல் செய்யவில்லை என தெரிவித்து கொள்கிறேன்


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 15:42

பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??


sridhar
அக் 16, 2024 19:22

ஸ்டாலின் தான் அதிமுக ஆட்சியில் தினமும் குறை சொல்லிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார்


krishna
அக் 16, 2024 22:40

AAHA EERA VENGAAYAM VAIKUNDESWARAN DRAVIDA MODEL AATCHIYIL PAALAARUM THENAARUM ODUDHU.KEVALAM 200 ROOVAA COOLIKKU IVVALAVU PERIYA MUTTU.ASINGAMAA ILLA.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை