உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பதியில் மார்ச் மாத சேவைக்கு முன்பதிவு

திருப்பதியில் மார்ச் மாத சேவைக்கு முன்பதிவு

சென்னை:திருமலை, திருப்பதி வெங்க டேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில், வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, ஸ்ரீவாரி சேவா டிக்கெட்டிற்கான எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு, இன்று காலை 10:00 மணிவரை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, நாளை காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.மார்ச் 9 முதல், 13ம் தேதிவரை நடக்கவுள்ள தெப்ப உற்சவ சேவைக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆன்லைன் சேவைகளுக்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.அங்கப்பிரதக்ஷனம் செய்வதற்கான முன்பதிவிற்கு, வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் சேவை மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு காலை 11:00 மணிக்கும் நடக்கிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.மார்ச் மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, வரும் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் தங்கு விடுதிகளுக்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை