உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., குறித்த சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதில்

ஈ.வெ.ரா., குறித்த சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதில்

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்காக, தனியொரு அமைச்சராக பிரசாரம் செய்து வருகிறார், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி. பிரசாரத்துக்கு நடுவே அவர் அளித்த பேட்டி: பிரசாரத்தின்போது மகளிர் உரிமைத்தொகை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்கக்கோரி வாக்காளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிக அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்தால், நிறைய அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்துள்ளனரே என எதிர்தரப்பில் கொந்தளிப்பர்.அதனால், இம்முறை தேவையில்லை என முடிவெடுத்து, பிரசாரத்துக்கு அமைச்சர்களை குறைத்து விட்டோம். ஆனால், அதையே கேள்வியாக எழுப்புகின்றனர். உள்ளூரில் இருக்கும் அமைச்சர்கள் பிரசாரம் செய்தால் போதும் என தலைமை அறிவுறுத்தி விட்டது. அந்த வகையில்தான் நான் பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளேன். தமிழக அரசின் தொடர் திட்டங்களின் பலனை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களும் அதிக அளவில் அனுபவித்துள்ளனர். அதனால், இம்முறையும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மற்றபடி ஈ.வெ.ரா., குறித்து சீமான் வாயில் வந்ததையெல்லாம் பேசி வருகிறார். அவர் என்ன பேசினாலும், அதற்கு தேர்தலுக்குப் பின் பதில் சொல்வோம். மக்கள், அவருக்கு தேர்தல் வாயிலாக பதிலளிக்க காத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V.Mohan
ஜன 31, 2025 14:35

திகவையும், ஈவெரா வையும் வெறுத்து திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரைக்கு, தங்களது கொள்கைகளுக்கும்,கட்சிக்கும் தலைவர் என காட்டிக்கொள்ள எவரும் இல்லாததால், ஈவெராவையே அவர் வெறுத்து ஒதுக்கியிருந்தும் தலைவராக காட்டிக்கொள்ளும் நிர்ப்பந்தம் சுதந்திரத்திற்கு பாடுபட்டதால் காங்கிரஸில் ஏகப்பட்ட தலைவர்கள் ஈவெரா வை தலைவரா ஏற்றுக்கொண்ட அண்ணாதுரை செய்த தவறும், சறுக்கலும் ஈன்று வரை அவர்கள் செயல்கள் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. ஈவெராவை பற்றி புகழ்ந்து பேசி ஈரோட்டில் ஓட்டு வாங்கி எம். எல். ஏ. வெற்றி கண்ட பிறகு, சீமானை கன்னா பின்னா வென்று கலாய்க்கலாம். கண்டிக்கிற மாதிரி பேரம் பேசலாம் இல்லாவிட்டால் வைகோ மாதிரி ஆக்கலாம்.


Mohan Kulumi
ஜன 31, 2025 01:01

பெரியார் வெங்காயத்தை சீமான் நன்றாக உறித்து விட்டார் அவரை மீண்டும் சீண்டினால் அவர் அதை நசுக்கி சாறாக பிழிந்து விடுவார்


Mohan Kulumi
ஜன 31, 2025 00:59

முதலில் காசு கொடுத்து ஓட்டு வாங்காமல் இருக்கட்டும்


சமீபத்திய செய்தி