பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு ரூ.29.46 கோடி நிதியுதவி
சென்னை; ''தமிழகத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க, 29.46 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். சட்டசபையில், பட்டு வளர்ச்சித் துறையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் 3,050 பட்டு விவசாயிகள் பயன் பெறும் வகையில், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க, 29.46 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்ய, 3,050 பட்டு விவசாயிகளுக்கு, 6.82 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில், பட்டு வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, விதைப் பண்ணைகள், பட்டுக் கூடு அங்காடிகள் ஆகியவற்றின் மேம்பாட்டு பணிகளுக்காக, 5.13 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வரும், 1,000 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு, அத்தியாவசிய வசதிகள், 4.82 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி தரப்படும் பட்டு விவசாயிகள் 3,050 பேருக்கு, நவீன தளவாடங்கள், 4.75 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும் தேனி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் பட்டு நுாற்பு தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 2.02 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை, மின் வணிகம் வாயிலாக உலக சந்தைக்கு எடுத்து செல்ல, 'கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்' 2 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் தமிழக கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த, 10 பெருநகரங்களில் 1.30 கோடி ரூபாய் செலவில் விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது பெறும் கைவினைஞர்களுக்கு, பரிசுத் தொகை, 10,000 ரூபாயில் இருந்து, 20,000 ரூபாயாக உயர்த்தப்படும், வெள்ளி பதக்கம், 5 கிராமில் இருந்து, 50 கிராமாக உயர்த்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.