உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சென்னையில் 3 பேர் சிக்கினர்!

ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சென்னையில் 3 பேர் சிக்கினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நகை கடைக்கு பணத்தை கொண்டு செல்ல கடத்தி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Ramakrishnan
மே 22, 2025 17:21

பணம் சிக்கியதாக செய்தி வரும். அதன் பிறகு இந்த செய்தி நீர்த்துப் போய் விடும்.இப்படித்தான் நாடாளுமன்றத்தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றினார்கள்.அந்த வழக்கு என்ன ஆச்சு? அதில் சம்பந்தப்பட்டவர் ஒரு கட்சியின் இப்போதைய மாநிலத் தலைவர். பிறகென்ன வழக்கின் நிலை கேட்கவா வேண்டும். மத்தியஅரசோ... மாநில அரசோ..இவர்களின் சட்டங்கள் எல்லாம் அப்பாவிகள் மீது மட்டுமே பாயும். மக்களுக்காகத்தான் சட்டம் என்பார்கள். அப்படி அல்ல... ஆளுவோர், ஆண்டவர்களுக்கு ஒரு சட்டம். இவர்களை ஆள அனுப்பியவர்களுக்கு ஒரு சட்டம். இதுதான் இப்போதைய நிலைப்பாடு.


V Venkatachalam
மே 22, 2025 14:33

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு 5 ஸ்டார்ஸ் கொடுக்கலாம். தாம்பரத்தில் 4 லட்சம். மாம்பலத்தில் 32 லட்சம். ஸ்டேஷன் கிரடிட் ரேட் 8 மடங்கு ஒசந்துரிச்சி. பாக்கி ஸ்டேஷன்கள் நிலைமை இனிமே தான் தெரியும்.


Ramesh Sargam
மே 22, 2025 13:13

தமிழக ரயில்கள் மூலமாக, குறிப்பாக சென்னை வழியாக செல்லும் ரயில்கள் மூலமாக போதைப்பொருள் கடத்துவது, ஹவாலா பணம் கொண்டுசெல்வது, போன்ற குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. தமிழ் நாட்டு காவல்துறையினர்தான் லாயக்கற்றவர்கள் என்றால், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பணிபுரியும் ரயில்வே காவல்துறையினர் கூட எதற்கும் லாயக்கற்றவர்களாக உள்ளனர். ஏதோ ஒரு சில அதிகாரிகள் நேர்மையாக பணிபுரிந்து இதுபோல ஒன்றிரண்டு குற்றவாளிகளை பிடிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Rathna
மே 22, 2025 11:46

ஹவாலா என்பது பல வகை 1. கணக்கில் வராத பணம் - Black money 2. IT kattatha கள்ளப் பணம். 3. இந்தியாவில் அதிக அளவு பணத்தை வைக்க முடியாமல், அவற்றை வெளி நாட்டிற்கு கடத்தி செல்ல அங்கே சொத்து வாங்க, முதலீடு செய்ய உள்ள பணம். 4. தங்க கடத்தல், போதை பொருள் விற்பனை மூலம் வரும் சட்ட விரோத பணம் 5. IT/GST காட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றுவது. 6. இது தவிர ஹவாலா ஏஜெண்டுகள் வெளி நாடுகளில் அந்நாட்டு பணத்தை வாங்கி இங்கு இந்திய பணத்தில் settlement செய்வது 7. தீவிரவாதிகள் கள்ள இந்திய ரூபாய் அச்சடித்து அவற்றை வெள்ளையாக மாற்றியது. இவை அனைத்திலும் ஜிஹாதிகள் 90% ஈடுபட்டு உள்ளார்கள்.


ஆரூர் ரங்
மே 22, 2025 10:32

பெரும்பாலான நகைக்கடைகளில் கடத்தல் தங்கம்தான் அதிகம். அந்த கணக்கில் வராத தங்கத்தை விற்க வசதியாக வாடிக்கையாளர்களும் பில் வேண்டாமென கூறி விடுகிறார்கள். ஹவாலா ஜோராக நடக்கிறது. தீவிரவாதிகளுக்கும் மகிழ்ச்சி. பில் இல்லாமல் மக்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்தாலும் பயங்கரவாதம் செழிக்கின்றது.


பாமரன்
மே 22, 2025 10:18

அதென்ன ஹவாலா பணம்... எல்லாம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணம் தானே?? நாம் பணத்தை இவ்ளோ தான் வச்சிக்கனும்னு எந்த ரூலும் இல்லை... கணக்கில் வராத அல்லது காட்டாத பணம்னா அதுக்கு டாக்ஸ் கட்டிட்டா விடும் அளவுக்கு தான் நம் நாட்டில் விதிமுறைகள் இருக்கு...


Kumar Kumzi
மே 22, 2025 09:11

ஹவாலா பணம் போதைப்பொருள் தங்கம் கடத்துற மூர்க்கனின் பெயர்கள் வெளியே சொல்ல கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 22, 2025 08:51

[ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ] .... மர்ம மனிதர்களா ??


sundarsvpr
மே 22, 2025 08:43

ஹவாலா மற்றும் கள்ள பணம் என்பது சரியில்லை. தொடக்கம் நாணயங்கள் தாள்கள் தயார் செய்யுமிடம். அதாவது reserve வங்கி. வழக்கு முடிந்து பணத்திற்கு உரியவர் எவர் என்று தெரியும் வரை உரிமையான இடம் reserve வங்கி. நல்ல பணம் காரணம் இல்லாமல் கள்ள பணம் ஆகாது. இதனை யார் உறுதிசெய்வது. பணத்திற்கு உரியவர் ஆதாரம் காட்டினால்தான்.


Svs Yaadum oore
மே 22, 2025 08:20

மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்ததாம் ....இது என்னமோ புதுசா இவனுங்களுக்கு செய்தி வந்ததாம்..மாம்பலம் சைதாப்பேட்டையில் கஞ்சா போதை புழங்குவது ஊர் அறிந்த ரகசியம் ....இதனால் பாலியல் குற்றம் ரோட்டில் பெண்கள் நகை பறிப்பு சம்பவங்கள் ...படு அசிங்கமான கேவலமான ஆபாச விடியல் ஆட்சி நடக்குது ....


angbu ganesh
மே 22, 2025 09:24

கரெக்ட் போலீசாரை ட்ரைன்ல foot போர்டுல நின்னு அப்படியே ஓரமா பார்த்திட்டு போனா சின்ன பசங்க என்னென்ன செய்யறானுங்கன்னு தெரியும் நமக்கே இது தெரியுது சும்மா கண்ணாமூச்சி வெளயாடறானுங்க ஆட்சியாளர்கள்


சமீபத்திய செய்தி