உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் வினியோகம்: சதியை உணர்ந்து செய்தோம் என்கிறார் ரகுபதி

முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் வினியோகம்: சதியை உணர்ந்து செய்தோம் என்கிறார் ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்து தான், 5,000 ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வழங்கி உள்ளார்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:பிப்., மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, 3,000 ஆயிரத்தை, மொத்தமாக, 1.31 கோடி பெண்களுக்கு, முதல்வர் வழங்கி, இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். இந்தத் தொகையை அறிவித்து விட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனே நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விடுவர். எனவே, பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பயன், தடையின்றி சேர வேண்டும் என, முதல்வர் இதை வழங்கி உள்ளார்.தேர்தல் நேரத்தில் தான் கோடை கால நிதி வழங்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது. இத்திட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., வினர் சட்டசபை தேர்தலை சாக்காக வைத்து, நீதிமன்ற வழக்குகள் வாயிலாக முடக்க சதி செய்தனர். இதை உணர்ந்து தான், மூன்று மாதங்களுக்கான தொகையை, முதல்வர் முன் கூட்டியே வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மகளிரணி நடனம்

அறிவாலயத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, மகளிர் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்ததற்காக, மகளிர் அணியினர் நன்றி தெரிவித்தனர். தங்கள் கையில், 5,000 ரூபாயை வைத்தபடி, நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆயிரம் விளக்கு பகுதியில் பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள், சாலையில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெண் கவுன்சிலர் பிரேமா சுரேஷ் ஏற்பாட்டில், இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

sivaram
பிப் 14, 2026 12:25

திரு சுள்ளான் அவர்களே கல்விக்கு சிலவு செய்வார்கள் என்று சொல்லி இருந்தீர்களே , அதற்க்கு நான் சொல்லி இருந்த விவரங்களுக்கு ஒன்றும் சொல்லாமல் நகை கடை , வாழ்க்கை தரம் ,பீடா என்று புருடா விடுகிறீர்கள் உத்தமரே


SULLAN
பிப் 14, 2026 16:42

திரு சிவ ராம் அவர்களே ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உணர்ச்சி அவசியம் அதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்கனவேவே தமிழ் நாட்டில் மிக உண்டு. நான் சொல்வது தவறென்றால் உங்களுக்கு வீட்டில் வேலை செய்யும் எந்த ஒரு பெண்மணியையும் கேட்டு பாருங்கள் தாங்கள் வெறும் கஞ்சியும் சாதாரண உடை அணிந்தாலும் பரவாயில்லை பிள்ளைகளுக்கான கல்வி செலவில் குறை வைப்பதில்லை என்பதையும் அறிவு ஒளியே வாழ்வில் ஏற்றம் தரும் என தெளிவாக சொல்வர். விதி விலக்குகள் உண்டு சிலர் உருப்படாமல் டாஸ்மாக் சென்று சீரழிவதற்கெல்லாம் அரசிடம் முறையிட முடியாது. எந்த விளம்பரமும் செய்யவில்லை யாரையும் சாராய கடைக்கு வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை மக்களுக்கு என்று விருப்பங்கள் உண்டு அது தனி நபர் சுதந்திரம் இது சுதந்திரம் நாடு. பணம் வாங்கிய அனைவரும் வாக்களித்து விடுவர் என்றும் நம்ப முடியாது . பணி செய்வதே நம் கடன் முடிவு மக்கள் கையில் இது கலைஞர் ஐயா அவர்களே சொல்லி தந்த பால பாடம்.


SULLAN
பிப் 14, 2026 18:58

வேறெந்த மாநிலத்தையும் விட தமிழ் நாடு பீடு நடை போட இந்த முன் யோசனைகளே தொலைநோக்கு பார்வைகளே காரணம்.


நெல்லை பாஸ்கர்
பிப் 14, 2026 09:11

பாஜக ஆளும் புதுச்சேரி போன்ற இடங்களிலும் மகளிர் உரிமைத் தொகை 2500/- வழங்க ஒப்புதல் அளித்த பாஜக அரசு தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யும் என்று நீங்கள் கூறும் ஆதாரமற்ற தகவல்களை உ...பி மக்கள் மட்டுமே நம்புவார்கள்.


sivaram
பிப் 14, 2026 09:09

திரு சுள்ளான் அவர்களே நேற்று மாலையே டாஸ்மாக்கில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது , இதை நீங்கள் நேரில் சென்று பாருங்கள் , உதயநிதி மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று எழுதாதீர்கள் அதன் அர்த்தமே வேறு , தாய்மார்கள் கல்விக்கு சிலவு செய்வார்களா , எப்பொழுது பள்ளிகள் மீண்டும் திறக்கும் மாதத்திலா , இந்த மாதம் என்ன கல்வி செலவு , நீங்கள் சரியான. சுள்ளான்உண்மையாகவே


SULLAN
பிப் 14, 2026 11:27

டாஸ்மாக்கில் மட்டுமல்ல ஜவுளிக்கடை நகை கடை என்று எல்லா பக்கம்மும் களை கட்டத்தான் செய்யும். வடக்கே வெறும் ஐந்து ரூபாய் பான் பீடா அளவிற்கே வாழ்க்கைத்தரம் உள்ளது இங்கே டாஸ்மாக் அளவிற்கு வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. உதயநிதி அர்த்தம் தெரிந்துதான் சொல்லியுள்ளேன் ?? ஏன் அவன் என்னைக்காவது உத்தமன் செர்டிபிகேட் கேட்டானா?? என்ன?? என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் எதிர்கட்சிகளை பார்த்தால்தான் பரிதாபமாக இருக்குறது.


தாமரை மலர்கிறது
பிப் 14, 2026 01:03

பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே நாளில் காலி. இனி ரோடு, ஹாஸ்பிடல், பாலம், பள்ளிக்கூடம், அணைகள் கட்ட சொல்லி ஸ்டாலினை கேட்காதீங்க. அதற்கான பணத்தை தான் இப்போதே வாங்கிட்டீங்க. இனி மழைபெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தா, மொண்டு குடிங்க.


Sivakumar
பிப் 13, 2026 22:57

மக்கள் வரிப்பணமா இல்லை யார் வீட்டு சொத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்கள்?


sivaram
பிப் 13, 2026 22:49

பெண்களுக்கு கொடுக்கும் இந்த பணத்தில் அவர்கள் 3000 ரூபாயை கணவர்களிடம் நிச்சயமாக தருவார்கள் ,1 பாட்டில் டாஸ்மாக் பீர் 230 ரூபாய் , வெய்யில் சூடு தொடங்கி விட்டது , சர்வ சாதாரணமாக 12 பாட்டில் பீர் குடித்து ஆண்கள் சந்தோஷமா இருப்பார்கள் , வாழ்க திராவிட மாடல் , வளர்க சுய கவுரவம் இல்லாத தமிழ் சமுதாயம் , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்


SULLAN
பிப் 14, 2026 06:53

உன்னை போல ஏன் பிறரை நினைக்கிறாய். தனது பிள்ளைகளின் கல்வி செலவிற்கு பயன்படுத்தி கொள்வார்கள் தாய்மார்கள். உதயநிதி... மாஸ்டர் ஸ்ட்ரோக். எதிர்க்கட்சிகளுக்கு பக்க வாதம் வந்து விட்டது.


பேசும் தமிழன்
பிப் 14, 2026 08:55

கொடுப்பது போல் கொடுத்து.... டாஸ்மாக் மூலம் எடுத்து விடலாம் என்ற நப்பாசை தான்... டாஸ்மாக்கை மூடி விட்டு கொடுத்தால் முதல்வர் அவர்களை உண்மையிலேயே பாராட்டலாம்.


guna
பிப் 14, 2026 10:10

பாவம் சுள்ளான்.. நேற்று டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது


anonymous
பிப் 13, 2026 22:18

ஜெயித்து வரப்போகும் ஐந்தாண்டிற்கும் சேர்த்து ரூபாய் 65,000 தைக் கொடுக்க இந்த அறிவு ஜீவி இரக்குபதி சட்ட அறிவை பகர்ந்திருக்கலாம். ஒருவேளை திமுக தோற்றால் திரும்பவும் பழைய இடத்திற்கே செல்லலாம் என்ற ஐடியா இருக்குமோ?


C.SRIRAM
பிப் 13, 2026 22:13

5000 ரூபாய் மக்கள் வரிப்பணம் மற்றும் கடன் வாங்கி மக்களுக்கு பெரும்பாலும் கட்சி காரர்களுக்கு கொடுப்பது தான் சதி . உங்கள் கட்சி அல்லது அடித்த கொள்ளையிலிருந்து கொடுத்திருந்தால் கொஞ்சமாவது சரி


Mohanakrishnan
பிப் 13, 2026 22:05

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெரியாமல் 30 வருடமாக ஆட்சி செய்து இருப்பது துரதிஷ்டம்


Mohanakrishnan
பிப் 13, 2026 22:04

இந்த கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறதா இது கூட தெரியாமல் 5000 ரூபாய் கொடுத்துவிட்டு வக்காலத்து வேறு. முட்டாள்தனம் வேண்டுமென்றே அடுத்தவர் பெயரில் பழி போடுகின்றனர்


சமீபத்திய செய்தி