உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இனாமாக வழங்கிய, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, சட்டவிரோதமாக டயோசிஸ் நிர்வாகிகள் விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளைமேட்டை சேர்ந்த, எல்சியஸ் பெர்னான்டோ என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் டயோசிஸ், செங்கல்பட்டு டயோசிஸ் நிர்வாகிகள், சட்டவிரோதமாக அரசு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். இந்த நிலங்களின் மதிப்பு, 5,000 கோடி ரூபாய். சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு, 75.25 ஏக்கர் நிலத்தை இனாம் ஆணையம் வழங்கியது. மத சேவைக்காக, 1915ல் இந்த நிலம் வழங்கப்பட்டது. சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் சொசைட்டி அல்லது செங்கல்பட்டு டயோசிஸ் சொசைட்டியின் கீழ், இது எப்படி வந்தது என்று தெரியவில்லை.நிலத்தின் பெரும் பகுதியை சட்டவிரோதமாக பலருக்கு, சொசைட்டியின் நிர்வாகிகள் விற்பனை செய்துள்ளனர். நிலத்தை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து, இனாம் ஆணையர் தவறி உள்ளார்.சட்டவிரோத விற்பனைக்கு அவர் பதில் கூற வேண்டும். 75.25 ஏக்கர் நிலத்தையும் மீட்கும் கடமை அவருக்கு உள்ளது.இரும்புலியூர் கிராமத்தில் மேய்ச்சல் நிலம், 53 ஏக்கர், பட்டா நிலமாக மாற்றப்பட்டு உள்ளது. இதை, 300க்கும் மேலான வீட்டுமனைகளாக மாற்றி, அருள் நகர் என்ற பெயரில், பலருக்கு விற்பனை செய்துள்ளனர். நில விற்பனை வாயிலாக கிடைத்த வருவாயை, டயோசிஸ் கணக்கில் சேர்க்கப்படவில்லை. பிஷப் மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புனிதமேரி சாலையில், 1.55 ஏக்கர் புறம்போக்கு நிலம், தேவாலயத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பாதுகாக்க போலீசார் முயற்சிக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசுக்கும், போலீசுக்கும் மனு அனுப்பினேன். என்னை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. நீதிமன்றம் தலையிடவில்லை என்றால், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் போய் விடும். எனவே, 130 ஏக்கர் நிலத்தை மீட்கவும், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
டிச 09, 2024 05:23

கார்டினல் கிட்டே சொல்லிப் பாருங்கோ.


தமிழ்வேள்
டிச 08, 2024 14:03

தப்பி தவறி ஏசுவோ மேரியோ எழுந்து வந்தால் ஆதிமூல தொழிலில் இறக்கிவிட்டு காசுபார்த்து பாவமன்னிப்பு கூட கொடுப்பார்கள்...


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 13:42

"சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு, 75.25 ஏக்கர் நிலத்தை இனாம் ஆணையம் வழங்கியது. மத சேவைக்காக, 1915ல் இந்த நிலம் வழங்கப்பட்டது". அப்புறம் எப்படி இது அரசு நிலம் ஆகும்? 1915 ல் தீர்வை எழுதி கொடுத்த பிறகு அதில் அவர்கள் சர்ச் கட்டினால் என்ன, ஸ்கூல் கட்டினால் என்ன அல்லது பிளாட் போட்டு விற்றால் என்ன? சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது.


ஆரூர் ரங்
டிச 08, 2024 11:01

கத்தோலிக்க பிரிவில் நிறைய தவறுகள் நடப்பதாகக் கூறி பிரிந்து உருவாக்கப்பட்டது புராட்டஸ்டண்ட் CSI சபை. அதுவே பத்துக் கட்டளைகளில் முக்கியமான திருடாதே எனும் கட்டளையை மீறுகிறது என்றால் அது எதற்கு? பிரிட்டிஷார் பாரத ஹிந்து அரசர்களின் சொத்துக்களை விதவிதமாக அபகரித்து அதனை தமது மதமாற்ற சபைகளுக்கு தானமாக அளித்துள்ளார்கள். அப்படிப்பட்ட பாவச்சொத்துக்களை திருப்பித் தந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். தவிர ஏற்கனவே திருச்சபையில் பொறுப்பு வகிப்பவர்கள் மீது அதே கிருஸ்துவர்களே முறைகேடு வழக்குக்களை போட்டுள்ளனர். பிஷப் மீதே MBBS அனுமதி ஊழல் கேஸ்?


jayvee
டிச 08, 2024 10:53

என்னவோ இங்கிருக்கும் அந்நிய மதவாதிகளின் மத சொத்துகள் எல்லாம் அரேபியாவிலிருந்தும் ஜெருசலேத்திரிந்தும் பெயர்த்துக் கொண்டு வந்தமாதிரி ..அனைத்தும் ஹிந்துக்களின் சொத்து ..ஹிந்து கோவில்களின் சொத்து ..கொள்ளையடிக்க மதத்தீவிரவாதிகள் அந்த சொத்தையும் திருடி தங்களது அடிமைகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்தது. அதையும் ஒரு கும்பல் திருடிகிறது என்றால் எவ்வளவு கேவலம் பாருங்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:41

மதச் சிறுபான்மையினர் என்றால், அதிகாரமுள்ள அரசுகள் / அரசு அமைப்புக்கள் கூட கேள்வி கேட்கவே அஞ்சும் நிலை ........


sridhar
டிச 08, 2024 10:40

இந்த லட்சணத்துல ஹிந்து மதத்தை எப்போதும் கேவலமா பேசறது . உங்க மதத்து அழுக்கை பாருங்கடா .


Perumal Pillai
டிச 08, 2024 09:58

The Dioceses run parallel governments in their respective areas with the Bishops functioning as CEOs instead of being a spiritual heads. All the perceivable evils under the Sun are happening there with no restriction or inhibition. Being the hotbeds of immoral activities one can achieve anything with money or adjustments as the cases may be. While they run government aided educational institutions the admissions, appointments and transfers are effected for hefty sums with the highest bidder getting the slots. These diocese business houses must be brought under the government control and administration like the HR and CE department to maintain transparency and neutrality. It is said in The Book that Jesus entered the temple courts and drove out all who were buying and selling there. He overturned the s of the money changers and the benches of those selling doves. It is written, he said to them, My house will be called a house of prayer, but you are making it a den of robbers”


QCS MCCL
டிச 08, 2024 09:29

இந்த மோசடி இந்து முஸ்லீம், கிருத்துவ அணைத்து கோவில் நிலங்களிலிலும் அரசியில் வியாதிகள் இணைந்து மோசடி செய்கிறார்கள். நீதிமன்றம்தான் எதாவது செய்யவேண்டும். அரசை நம்பினால் அரசுதான் திருடனே


ஆரூர் ரங்
டிச 08, 2024 09:23

பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ராணுவத்தின் நிலத்தை ஒரு திருச்சபை விற்றதாக புகார். அதாவது அரசின் சொத்தை அரசுக்கே விற்பனை. இதெற்கெல்லாம் பாவமன்னிப்பே கிடைக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை