உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 அதிகாரிகள் 6 கூட்டம் நடத்த டீ உள்ளிட்ட செலவுக்கு ரூ.9 லட்சம்

15 அதிகாரிகள் 6 கூட்டம் நடத்த டீ உள்ளிட்ட செலவுக்கு ரூ.9 லட்சம்

சென்னை : மாநில அணைகள் பாதுகாப்பு அதிகாரிகள் 15 பேரின், டீ, காபி, மதிய உணவு செலவிற்கு, 9 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டம் 2021ல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில், 2022ம் ஆண்டு ஜூலை மாதம், அணைகள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு தலைமை பொறியாளர் தலைமையில், 15 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மத்திய, மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன், அணைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இதற்காக, 2028 ஜூலை மாதம் வரை மூன்று ஆண்டுகளுக்கு ஆறு கூட்டங்கள் நடத்த, 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு கூட்டத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செல வழித்து கொள்ளலாம். இந்நிதியில், டீ, காபி, மதிய உணவு, சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு, போட்டோ, வீடியோ செலவுகளை பார்த்து கொள்ள வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Yasararafath
அக் 14, 2025 18:22

இலட்சம் இல்லை.கோடி செலவு ஆகி இருக்கும்.


L BASKARAN
அக் 14, 2025 18:08

அது சரி. இது என்ன ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தா


தமிழன்
அக் 14, 2025 16:31

அடத்தவன் பையில இருந்து எடுத்து திங்க இது போல பல கூட்டம் நாட்டில உண்டு


sundarsvpr
அக் 14, 2025 14:19

செலவு செய்வதிலும் விதி முறை கடைபிடிக்கவேண்டும். அரசில் பொருள்கள் வாங்கவேண்டுமென்றால் குறைந்த quotation கொடுத்தவர்கள் இடம்தான் வாங்கவேண்டும். ஸடார் ஹோடேல்களிடம் இருந்து வாங்கமுடியாது. வீதி ஓரத்திலுள்ள நடைபாதை கடைகள் இடமிருந்து தான் உணவு வாங்கி கூட்டத்தில் வழங்கவேண்டும்.


Neelachandran
அக் 14, 2025 14:04

மூன்று குடும்பங்கள் 1.5 வருடத்திற்கு நிம்மதியாகச் சாப்பிடுவார்கள்.


என்னத்த சொல்ல
அக் 14, 2025 13:27

15 பேர் கொண்ட குழுவுக்கு, மீட்டிங் ரூம் வாடகை, தங்கும் வாடகை, சாப்பாடு, போக்குவாரத்து etc, இன்ற காலகட்டத்தில் ஒரு மீட்டிங் தல 1.5 lakhs போதுமானதாக இருக்காது போல் தான் தோன்றுகிறது.


Ramesh Sargam
அக் 14, 2025 13:11

டீ செலவு என்று கணக்கு காட்டிவிட்டு, அந்த கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பெண்டாட்டிகளுக்கு நகை வாங்கி போட்டு அழகு பார்ப்பார்கள்


Rajarajan
அக் 14, 2025 12:32

கோனார் கடையில் வருஷம் பூரா, கறி கஞ்சி அடிச்சாலும், இவ்ளோ செலவாகாதே. நெல்லுக்கு பாயும் நீர், புல்லுக்கும் பாய்கிறது.


M Ramachandran
அக் 14, 2025 11:13

திருடர்கள் என்ற பேய் கூட்டம் அரசாண்டால் பிணம் தின்னும் கழுகுகளுக்கு கொண்டாட்டம்.


Ganapathi Amir
அக் 14, 2025 10:30

மீட்டிங்கில் கலந்துகொள்ள அமைச்சர் உள்ளிட்ட பெருந்தலைகள் வரும்போது பூங்கொத்து.. புத்தகம்.. சால்வை.. மாலை.. ஸ்வீட்.. காரம்.. தண்ணீர்பாட்டில்.. அலங்கார வளைவு.. இன்னும் இத்யாதிகள் உள்ளன.. நடைமுறை தெரியாமல் பேச வருவது ..


Chandrasekaran Balasubramaniam
அக் 15, 2025 06:07

அவனுகளுக்கு எதுக்கு பூங்கொத்து சால்வை இன்னும் பிற. வெட்டி செலவு.


சமீபத்திய செய்தி