உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் அறங்காவலர் பதவிகளை பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆர்வம்

கோவில் அறங்காவலர் பதவிகளை பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள, 200க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களின் அறங்காவலர் பதவிகளை பெற, ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதற்கட்டமாக, 214 முக்கிய கோவில்கள் மற்றும் 27 சிறப்பு நிர்வாகத் திட்ட கோவில்களில், காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அறநிலையத்துறை சமீபத்தில் வெளியிட்டது. கோவில் அறங்காவலர் பதவி என்பது, ஆன்மிக பணி மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்தது என்பதால், ஆளும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் முதல் மாவட்ட அளவிலான வி.ஐ.பி.,க்கள் வரை பலரும், இப்பதவியை பெறுவதில் உறுதியாக உள்ளனர். ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள, 'ஏ கிரேடு' கோவில்களின் அறங்காவலராக நியமிக்கப்படும் போது, அது வட்டார அளவில் பெரும் அரசியல் செல்வாக்கையும், கவுரவத்தையும் தேடித் தரும் என்பதால், ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறை விதிமுறைகளின்படி, விண்ணப்ப படிவங்கள், 'ஆன்லைனில்' பெறப்பட்டு வந்தாலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை பெற்றுத் தர, ஆளும் கட்சித் தரப்பில் தனிப் பட்டியலே தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அறங்காவலர் குழுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய ஒரு பெண் உறுப்பினர் மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோரை, ஆளும் கட்சி நியமிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து, ஆன்மிக அன்பர்கள் கூறியதாவது: அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஆன்மிக நாட்டம் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அரசியல் ரீதியாக மட்டுமே இந்த இடங்கள் நிரப்பப்பட்டால், கோவில்களின் துாய்மையும், ஆன்மிக மாண்பும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தகுதியான மற்றும் உண்மையான பக்தர்களை மட்டுமே, அரசு தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சத்யநாராயணன்
ஜூலை 05, 2026 11:01

ரிலீசாக போகும் ஜனநாயகம் படத்தில் ஓப்பனிங் சோவின் முதல் பத்து டிக்கெட்டுக்குள் வாங்கியவர்களுக்கு தான் அறங்காவலர் பதவி ஒருவேளை கூட்ட நெரிசலில் முட்டி மோதி யாரேனும் இறந்து போனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்படும் அதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை ஆகவே அரசாங்க பதவிகளை யாரேனும் விரும்பினால் அவர்கள் முதலில் தங்களை ஒரு சிறந்த சினிமா பைத்தியங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்


ஊர்குருவி
ஜூலை 04, 2026 20:35

மக்கள் ஒன்று சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் நியமனத்திற்கு தடை உத்திரவு பெறுங்கள் ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் பற்றிய எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் .சட்டம் படித்த பக்தி உள்ளவர்கள் யாரும் முன்வரவேண்டும் .இதுதான் சுலபமாக அரசிடமிருந்து கோவில்க்ளை மீட்கும் வழி .


அப்பாவி
ஜூலை 04, 2026 17:18

யாரைப் போடட்டாலும் ஆட்டை தான். ராமர் கோவிலில் தான் பாக்குறோமே.


அப்பாவி
ஜூலை 04, 2026 17:15

சீக்கிரம் விடியல் பெருச்சாளிகளை வீட்டுக்கு அனுப்புங்க.


duruvasar
ஜூலை 04, 2026 17:00

மக்கள் பணி போக இறை பணியும் என்ற ஆற்று வெள்ள ஆர்வத்தை பார்த்து அம்பலத்தானே ஆடி போய்விடுவார். இந்த ஆர்வம் ஹிந்து இறை பணிக்கு மட்டுமா இல்லை கிருத்துவ, , இஸ்லாமிய இறை பணிக்கும் சேர்த்தா என்பதை நிருபர் விசாரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


duruvasar
ஜூலை 04, 2026 16:54

சேகர் பாபுவால் நியமிக்க்ஸ்பட்ட சிவம் என்ற பெயரில் ஆணும், மங்கையற்கெல்லாம் அரசி என்ற பெயரில் உள்ள இரு க்ரிப்டோ கிருத்துவர்களும் இன்னும் ஹிந்து அறநிலைய பணியில் இருக்கிறார்களா ?


R S BALA
ஜூலை 04, 2026 13:45

காசேதான் கடவுளடா அது கடவுளுக்கும் தெரியுமாடா..


Prabu
ஜூலை 04, 2026 11:30

அறங்காவலர் போர்வையில் கோயில் சொத்தை ஆட்டைய போடுவர்


V RAMASWAMY
ஜூலை 04, 2026 09:31

எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத உண்மையான கடவுள் பக்தி கொண்ட சனாதனிகளுக்குத் தான் அறங்காவலர் பதவிகள் கொடுக்கவேண்டும்.


S. Venugopal
ஜூலை 04, 2026 09:16

இராமாயணத்தில் ஒரு குட்டிக்கதை வழக்கத்தில் உள்ளது.


புதிய வீடியோ