உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை: முதல்வருக்கு ராகுல் கடிதம்

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை: முதல்வருக்கு ராகுல் கடிதம்

புதுடில்லி: உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் தேர்வு அம்பலப்படுத்தி உள்ளது என முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலினுக்கு ராகுல் கடிதம் எழுதி உள்ளார்அந்தக் கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசதி படைத்த சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக் கடமை நமக்கு உண்டு.பொது மருத்துவ கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதனை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கட்டாயம் கண்டிக்க வேண்டும். விளிம்பு நிலை மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

R K Raman
ஜூலை 15, 2024 14:20

உளறுவது என்று முடிவு செய்து விட்டதால் எதையும் ஆதாரம் இல்லாமல் பேசுவது வழக்கம். நீட் முன் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் விபரம் வெளியிட்டுப் பேச வேண்டும்


R K Raman
ஜூலை 15, 2024 14:18

காங்கிரஸ் தானாகவே இதைச் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தான். ஊழல் காங்கிரஸ் நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்றால் சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஜூலை 15, 2024 09:49

என்னது ஸ்டாலின் அவர்களுக்கு ராகுல் கடிதம் எழுதினாரா...நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதவாத நிதி சொன்னதை நம்பி கடிதம் எழுதி விட்டார் போல் தெரிகிறது.... இப்படியே இருவரும் மாற்றி மாற்றி கடிதம் எழுதி கொள்ள வேண்டியது தான் !!!


சந்திரன்
ஜூலை 15, 2024 08:37

நளினி சிதம்பரம் என்பரை தெரியுமா பப்பூ அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியாவது தெரியுமா காங்கிரஸ் மத்தியில் திமுக மாநிலத்தில் ஆண்டபோதுதான் காந்தி செல்வன் அமைச்சர் கைநாட்டு போட நீட் நிச்சயம் நடந்தது அதாவது தெரியுமா


panneer selvam
ஜூலை 14, 2024 22:52

Rahul bhai , Do you still think our rural students are able to pay 1 crore for a medical seat in a private medical college . Do you know why NEET was brought by Congress Government ?


தத்வமசி
ஜூலை 14, 2024 21:58

கொலம்பஸ் கண்டு பிடித்து விட்டார். உளறல் மன்னன்


Nagarajan S
ஜூலை 14, 2024 20:27

வரை முறை இல்லாமல் பேசும் காங்கிரஸ் தலைவரே, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வே வந்தது என்றாவது உங்களுக்கு தெரியுமா? நீட் தேர்வை ரத்துசெய்யமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாவது உங்களுக்கு தெரியுமா?


hari
ஜூலை 14, 2024 19:58

காவேரி தண்ணி வாங்க வக்கில்லை..... இதற்கு பல முட்டு


V RAMASWAMY
ஜூலை 14, 2024 19:57

இம்மாதிரி பொய்யான தகவல்கள் சொல்வதை நிறுத்துங்கள், கிராம மக்கள், மாணவர்கள் இதனை சொல்லட்டும் அவர்களாவே.


K.Muthuraj
ஜூலை 14, 2024 19:22

என்னைய்யா இன்னும் கிராமம் கிராமம் ன்னு ஓட்டிக்கிட்டு. கிராமத்தன்ன என்ன. உலகம் தெரியாமலா இருப்பான். இன்டர்நெட் அதுவும் jio வந்த பின் இந்தியாவில் எதுவும் கிராமம் இல்லை. பிஹாரில் இருந்து தமிழ்நாடு வேலை தேடி வர்றானே. உலகம் தெரியாமலா இருப்பான். கருமம்டா சாமி. இந்த மாதிரி aargue கோர்ட்டும் ஏற்றுக்கொள்வது தான் வேதனை.


மேலும் செய்திகள்