ஒப்பாரி வைத்து போராடிய ஊரக பணியாளர்கள் கைது
சென்னை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், கடந்த 2ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நான்காம் நாளான நேற்று, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுப ட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், திருமங்கலத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.