உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்

சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஸ்ரீதர் 7வது முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ' குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். 'அரசு, காவல் துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து, மற்ற போலீசார் சம்பவத்தின் போது செய்த செயல்கள் குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். 'தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஜூலை 24ல் ஸ்ரீதர் ஆஜராக வேண்டும். அன்று சி.பி.ஐ., மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

lana
ஜூலை 23, 2025 14:13

பல் பிடுங்கி பல்பர் தமிழன் கிடையாது. அவன் தப்பிக்க லாம். ஆனால் இங்கு கதை வேறு.


MAHADEVAN NATARAJAN
ஜூலை 23, 2025 13:25

the police who did the murder should be dealt with an iron fist. maximum punishment and withdrawal of all pension benefits should be done. These dogs need to learn civic way of living life. How can they murder innocent people. unacceptable


ஆரூர் ரங்
ஜூலை 23, 2025 12:57

முக்கிய குற்றவாளி அப்ரூவராக மாறுவதால் மன்னிப்புக் கிடைத்துவிடாது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் ஜாம் ஜாம் னு பதவிகளில் தொடருகின்றனர். பல்லு பிடுங்கி பல்பீர் கூட தப்பித்து விட்டார். அது போல இவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கலாம். இது விடியல் நாடு அல்லவா?.


pmsamy
ஜூலை 23, 2025 10:31

ஒரு குற்றம் நடந்தே எத்தனை வருஷம் ஆகுது. justice delayed is justice denied. ஒரு பைசாவுக்கு லாயக்கு இல்லாத நீதிமன்றங்கள் நீதிபதிகள் கொஞ்சமாவது...


Ganapathy Subramanian
ஜூலை 23, 2025 10:16

மந்திரியாக இருந்தால் என்ன குற்றம் செய்து இருந்தாலும் கோர்ட் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கும், அவர்களுக்கு ஏன் பதவி பிராமணம் செய்து வைக்கவில்லை என்று கேட்க்கும். இதுவே ஒரு சாதாரணன் என்றால் நான்கு வருடங்கள் ஆனாலும் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கும். என்னங்க உங்கள் சமத்துவம்?


r.thiyagarajan
ஜூலை 23, 2025 09:04

Good move welcome inspector be honest god is watching you n all…


J.Isaac
ஜூலை 23, 2025 08:33

ஒடிசாவில் ஜீப்பில்உயிருடன் இரண்டு குழந்தைகளை ,கிரகம் ஸ்டேன்ஸோடு எரித்து கொன்ற குற்றவாளியை விடுதலை செய்தார்கள்


Srinivasan Narayanasamy
ஜூலை 23, 2025 07:51

திருடன் ...


Padmasridharan
ஜூலை 23, 2025 07:38

மக்களுக்கு கெட்டது செய்ய கூட்டா நிறைய பேர் ஒண்ணா சேர்ர காவலர்களிடையே அநீதியை எதிர்த்து சாட்சி சொல்ல வர்றவருக்கு வாழ்த்துகள். இத்தனைக்கு காணாமல் போன நகைகள் எங்கே. .


visu
ஜூலை 23, 2025 07:34

முக்கிய குற்றவாளி அப்ரூவர் ஏன்றால் யாரை தண்டிப்பது தவிர இதில எல்லா, கண்டுபிடிக்க பட்டுவிட்டதே எதேர்க்கு அபரூவேர்


jaya
ஜூலை 23, 2025 09:50

அப்ரூவர் என்று சொல்லி எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக போடும் நாடகம்


புதிய வீடியோ