உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பிச்சை எடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்

ஓட்டுப்பிச்சை எடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்

கோவை:கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு, துணைபோகும் தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில் கோவையில், 'கருப்பு தின பேரணி' நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:2022 அக்., 23ல் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன், ஒரு தீவிரவாதி மனித வெடிகுண்டாக மாறி, காரில் வருகிறான். கோவை மாநகரத்துக்குள் அதிகமான மக்கள் செல்லக்கூடிய துணிக்கடைக்குள் அந்த காரை நிறுத்த வேண்டும்; அந்த கார் வெடிக்கும்போது, துாண்கள் சரிந்து, கடை இடிந்து விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும்போது, கோவில் அருகே வேகத்தடையை கடந்தபோது, காஸ் சிலிண்டர் சர்க்யூட் இணைப்பு 'கட்' ஆகி விட்டது; வண்டி அவ்விடத்திலேயே நிற்கிறது.அப்போது, குண்டு வெடித்து, அதே இடத்திலேயே தீவிரவாதி இறந்து விடுகிறான். இது, மனித வெடிகுண்டு தாக்குதல் என கூறினோம். இதை, சிலிண்டர் வெடிப்பு என தமிழக முதல்வர் கூறினார். மக்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்போது, ஒரு முதல்வர் எப்படி பேசினார்; சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.

காட்டில் சதித்திட்டம்

2022ம் ஆண்டு பிப்., 7ம் தேதி, சத்தியமங்கலம் வனப்பகுதியில் உமர்பாருக் என்பவன் தலைமையில் எட்டு பேர் இணைகின்றனர். அதில், கார் குண்டுவெடிப்பில் பலியான முபினும் ஒருவன். அவர்கள் சத்யப்பிரமாணம் செய்கின்றனர்.ஒவ்வொருவரும் என்ன வேலை செய்ய வேண்டுமென உமர்பாருக் கூறுகிறான். பிப்., 7ல் சத்தியமங்கலம் காட்டில் திட்டமிடுகின்றனர். 'இத்தீவிரவாதத்தை தற்கொலை தாக்குதலாக நடத்த வேண்டியது, உன் பொறுப்பு' என, முபினிடம் உமர்பாருக் தெரிவிக்கிறான்.மார்ச் மாதத்தில் 750 கிலோ அமோனியம் நைட்ரேட் வாங்குகிறார். அதனுடன் சல்பர் கலந்தால் வெடிபொருள். காரில் சிலிண்டருடன் வந்த முபினுடைய 2வது இலக்கு, போலீஸ் கமிஷனர் அலுவலகமாக இருந்தது. 7 பேர் 7 இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டுமென எழுதி வைத்திருக்கின்றனர்.முதல் இடம் துணிக்கடை; இரண்டாவது இடம் போலீஸ் கமிஷனர் அலுவலகம். ஆனால், காவல்துறை தரப்பில், அது சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்டது. முதலில், காவல் சீருடை அணிந்து பணிபுரிந்து வருகிறீர்களே, நீங்கள் பஸ்பமாகி இருப்பீர்கள்.

கழுத்தை அறுக்கும் வீடியோ

முபின் ஏழு நிமிட வீடியோ பதிவு செய்திருக்கிறான்; எப்படி கழுத்தை அறுப்பது; எப்படி கொலை செய்ய வேண்டும் என, வீடியோ பதிவிட்டிருக்கிறான். நான் சொல்வது உண்மையா என்பதை, 'சார்ஜ் சீட்'டை படித்துப் பாருங்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஆணையம் இதுவரை 18 பேரை கைது செய்திருக்கிறது. அதனால், கோவையில் என்.ஐ.ஏ., அமைக்க, மத்திய அரசு பரிசீலனை செய்கிறது.1998 பிப்., 14ல் நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, மைசூருவில் இருந்து வெடிமருந்து வாங்கி வந்தவர் பாஷா. அதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இதே பாஷா, 2003ல் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றபோது, நிருபர்களை பார்த்து, 'கோவைக்கு மோடி வந்தால், கொன்று விடுவேன்' என்று கத்தினார். அப்போது, குஜராத் முதல்வராக மோடி இருந்தார். கோவைக்கு வந்தார்; காஞ்சிபுரம், குஜராத் சென்றார். பிரதமர் ஆனார்; கோவைக்கு வந்து, 'ரோடு ஷோ' நடத்தி காட்டினார்.'ரோடு ஷோ' நடத்தியபோது, ஆர்.எஸ்.புரத்தில், 58 பேருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இறந்துபோன இஸ்லாமியர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். நாங்கள் இந்தியர்கள் என்பதே எங்கள் அடையாளம்.

விழித்துக்கொள்ளுங்கள்

நானும் ஒரு கிறிஸ்தவன்; நானும் ஒரு இஸ்லாமியன் என, உதயநிதி சொல்கிறார். நானும் ஒரு ஹிந்து என சொல்லலாமே. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமெனில், ஓட்டுப்பிச்சை எடுப்பவர்களை, வீட்டுக்கு அனுப்புங்கள்.1993ல் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை தகர்த்தபோது, அல்-உம்மா இயக்கத்தினரை கைது செய்தனர். 1997, ஜன., மாதம் முக்கிய குற்றவாளிகள், பெயிலில் வெளியே வருகின்றனர். கோர்ட்டில் ஆஜராக வேண்டிய அரசு வக்கீல் ஆஜராகவில்லை.அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது. அதே அல்-உம்மா இயக்கத்தினர், 1998ல் கோவையில் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தினர். 2009ல் அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவில், ஒன்பது பேரை விடுதலை செய்தனர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வெடிகுண்டு சம்பவத்தில் கைதாகி சிறையில் இருப்பவர்களை, அரசு விடுதலை செய்யும் என மாஜி அமைச்சர் மஸ்தான் பேசினார். கவர்னரை சந்தித்து, மனு கொடுத்து நிறுத்தி வைத்தோம். தமிழர்களின் மிகப்பெரிய வியாதி மறதி; இவ்வியாதி இருக்கும் வரை ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல், இருந்து கொண்டே இருக்கும்.இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

கைது நடவடிக்கை

பேசி முடித்த பின், பேரணி துவங்கியது. தடையை மீறி பேரணி நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Jay
டிச 22, 2024 15:24

இந்த தீவிரவாதிகளை நாளை அண்ணன் தம்பி என்று கூற வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள், வெட்கமில்லாமல் ஓட்டுகளை பிச்சை எடுக்க. நாளைய சமுதாயம் நல்லபடியாக அமைய இங்கு உள்ள அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது, பொது மக்களாக இருக்கட்டும் அல்லது அரசியல் கட்சிகளாக இருக்கட்டும். 58 பேரை கொன்றவனை அப்பா என்று கூறுவதா? அப்படிப்பட்ட தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்க வேண்டும் அப்பொழுதுதான் இங்கு அனைவருக்கும் நல்லதாக ஒரு சமுதாயம் அமையும். ஓட்டுக்காகவும் சிறுபான்மையர்களை திருப்தி படுத்துவதற்காகவும் இப்படி எல்லாம் ஒரு கேவலமான நாடகம் தேவையா? இதற்கு மிக முக்கியமான காரணம் பெரும்பான்மையினர் டம்மி பீசுகளாக இருப்பதுதான். குறைந்தபட்ச அரசியல் அறிவும் குறைந்தபட்ச சொரணையும் இருந்தால் இந்த மாதிரி கேவலமான செயல்கள் இந்த சமுதாயத்தில் நடைபெறாது.


MADHAVAN
டிச 21, 2024 12:48

கரெக்ட்டா தீவிரவாதிக்கு அண்ணாமலை ஸ்கெட்ச் போட்டு குடுத்திருக்கன், ஆனா பாருங்க அது அண்ணாமலை சொன்ன இடத்திற்கு போகாமலேயே வெடிச்சுருச்சு, அண்ணாமலை எதிர்பார்த்தது ஒன்னு, நடந்தது ஒன்னு, பிஜேபி கரனுங்க இப்படி அராஜகம் செஞ்சு தான் தமிழகத்திலே இவனுங்க இருப்ப காட்டுவானுங்க,


Sampath Kumar
டிச 21, 2024 09:26

ஆகா என்ன பேச்சு ஏன்னா பேச்சு அசத்தி டயல் பொங்கோனா அபப்டியே ஊரு ஊராய் பொய் பேச்சு நல்ல வோட்டு பிச்சை கிடைக்கும்


Prasanna Krishnan R
டிச 21, 2024 10:50

சம்பத், இது உங்களைப் போன்ற தரகர்களுக்காக. வியாபாரம் செய்யலாம் ஆனால் சிவப்பு விளக்கு பகுதியில்.


Paramasivam
டிச 21, 2024 12:44

சம்பத்து, உணவில் உப்பே சேர்த்துக்கொள்ள மாட்டீரோ? இது என்ன பிறவி????


Kalyanaraman
டிச 21, 2024 07:49

பிரிவினை வாதத்தை பெரிதும் ஆதரிக்கும் திமுக என்கிற விஷத்தை வரும் தேர்தலிலாவது தூக்கி எறிய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஓட்டு போடாத 40 சதவீதத்தினர் ஓட்டு போட்டால் இது நிச்சயம் நடக்கும்.


Mani . V
டிச 21, 2024 05:57

மிஸ்டர் அண்ணாமலை, குவாட்டர், கோழிப்பிரியாணி, ரெண்டாயிரம் ஓவாய், தோடு, கொலுசு, அண்டா, குண்டா இப்படி வாங்கிக் கொண்டு மக்கள்தான் பிச்சைக்கு ஓட்டுப் போடுகிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
டிச 21, 2024 05:46

டெமாக்ரசி என்பதின் செயல்பாடுகள் சோரஸ் மற்றும் அரபு நாடுகளால் சீரழிக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது


சமீபத்திய செய்தி