உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்கொடுமை வழக்கு; அ.தி.மு.க., நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கு; அ.தி.மு.க., நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகி மற்றும் போலீஸ் அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க., 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Ramanathan
ஜன 08, 2025 11:56

ராஜியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவேண்டும்.


Barakat Ali
ஜன 08, 2025 10:11

அடடா... இனிமே அதிமுகவுக்கு யார் அந்த சார் ன்னு கேட்டு போராட கூச்சமா இருக்குமா??


Kanns
ஜன 08, 2025 07:12

Good things to Arrest Erring Police & Political-Superiors Goondas for Power Misusing Biased Investigations & Interference in Policing


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:58

காலையில் இருந்து பார்க்கிறேன்... வழக்கம் போல வெட்கமே இல்லாமல் முட்டுக்கொடுக்கும் உடன்பிறப்புக்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒருவனையும் காணவில்லை.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 13:48

இந்த செய்திக்கு ரத்தத்தின் ரத்தங்கள் தான் முட்டுக் கொடுப்பார்கள். இந்த செய்தியை உடன்பிறப்புகள் கொண்டாடுவார்கள். இந்த சுதாகரின் வேலை யும் கைது நடவடிக்கையும் அதிமுக வுக்கு சரியான அடி ஆச்சே. இனி அதிமுக யார் அந்த சார் பேனர்களையும் ஸ்டிக்கர்களையும் நீக்க வேண்டும்.


D.Ambujavalli
ஜன 08, 2025 06:27

அடுத்து அவர்கள் வருவார்கள் அப்போதுதான் அண்ணா யூனிவர்சிட்டி கேசின் பிரபல சாரும், அவருக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளும் கைதாவார்கள் இதே சக்கரம்தான் மாறி மாறிச் சுழல்கிறது


Padmasridharan
ஜன 08, 2025 06:23

Mr. சுதாகர் & Ms. ராஜி புகைப்படங்கள் காவல்துறை என்பதனால் இந்த செய்தியில் வெளியிடப்படவில்லை. அதே சாதாரண மக்கள் என்றால் இந்நேரம் புகைப்படம் வரலாறு படைத்திருக்கும் செய்திகளில்


chidhambaram
ஜன 07, 2025 23:32

காலம் தாழ்ந்த நடவடிக்கை என்றாலும் , இப்போவாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதே ...ஆய்வாளர் ராஜி போன்றவர்களால் தான் காவல் துறைக்கு இழுக்கு


Kasimani Baskaran
ஜன 07, 2025 22:49

ஹி ஹி இதுதாண்டா ஆத்தா தீம்க்காவுக்கும் தாத்தா தீம்க்காவுக்கும் பொதுவான திராவிட போலீஸ்...


புதிய வீடியோ