உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துக்காக தாய் கொலை மகன் கைது

சொத்துக்காக தாய் கொலை மகன் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மனைவி கலைச்செல்வி 67. இவரது மூத்த மகன் ரூபிசன் 40. திருமணமாகி மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.கலைச்செல்வி தனது வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டை தமக்கு தருமாறு ரூபிசன் கேட்டார்.கலைச்செல்வி மறுத்து விட்டார். ஆத்திரமுற்ற ரூபிசன், நண்பர் சூசை அந்தோணி என்பவருடன் வந்து கலைச்செல்வியுடன் தகராறில் ஈடுபட்டார். பின் தாயாரின் கழுத்தை நெரித்து தலையை சுவரில் அடித்து கொலை செய்தார். கலைச்செல்வியின் இளைய மகன் அந்தோணி டேரிசன் புகார் செய்தார். ரூபிசன், சூசைஅந்தோணியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை