உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவரன் தங்கம் விலை 80,480 ரூபாயை எட்டியது

சவரன் தங்கம் விலை 80,480 ரூபாயை எட்டியது

சென்னை :தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, 80,480 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 10,005 ரூபாய்க்கும், சவரன் 80,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 138 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று காலை தங்கம் விலை, கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 9,970 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 280 ரூபாய் சரிவடைந்து, 79,760 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் மதியம், தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 10,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 80,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 140 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை