வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழ் சினிமா பாருங்கள். கடத்தலை கற்கலாம்
பிரைவேட் ஜெட் , ஹைஸ்பீட் பைபர் படகுகள் , பிரைவேட் சொகுசு கப்பல்கள் , வைத்திருக்கும் , அதிபர்கள் , அரசியல்வாதிகள் , சினிமாக்காரர்கள் , இவர்களின் ஜெட்களை இன்ச் இன்ச்-ஆக சோதனை செய்வது சால சிறந்தது . . .
கப்பல்களில் வரும் கண்டைனர்களில்? நடுக்கடலில் கப்பல்களை நிறுத்தி, மீன்பிடிபடகுகள் மூலம்? அரேபியன் கரைகளில் பீச் ரெசார்ட்களில் இருந்து இந்திய மேற்கு கரைகளுக்கு, சில மணி நேரங்களில் வரும் ஹைஸ்பீட் பைபர் படகுகள் மூலம்? ட்ரோன்கள் மூலம்? இப்டியாக, டன் கணக்கில் நடக்கும் கடத்தல்கள் எல்லாம் மேலிட பார்வையாலே சரி செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான கிளைகள் பரப்பி உள்ள நகை கடைகளில் நகைககளாக பதுங்கி விடுகின்றன... விற்பனைக்காக அல்ல... சும்மா பதுங்கி இருந்தாலே போதும் என்று வைக்கப்பட்டுள்ளன . . . ஆனால் இந்த மாதிரி கிராம் கணக்கில் வரும் கடத்தல்கள் எப்போதாவது பிடி படுகின்றன, செய்திகள் ஆகின்றன . . .அதிலும் கூட , பல கிலோக்கள், சுங்க அதிகாரிகளின் வீடுகளுக்கு, மஞ்சப் பைகளில் சென்று தஞ்சமாகின்றன... குருவிகள்தான் மாட்டுகின்றன, லோக்கல் டாண்-கள்,, சர்வதேச டாண் டாண் -கள் எல்லாம் - பில்லா படத்தில் வருவது போல - மெர்சிடஸிகளிலும், ரோல்ஸ்ராய்ஸ்களிலும் பறக்கின்றார்கள் . . .
புது ரூட்டா அது என்ன புது ரூட்டு
சுங்கத்திற்கு எவ்வளவு பங்கு என்பது தான் கேள்விக்குறி? அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் நடப்பது குறைவு. இவர்களின் சொத்துக்கள் பல கோடிகளில் தேறும்.
கடத்தல் தங்கத்தை குருவிகளை வைத்துக் கொள்ளப் போவதில்லை. பெரிய நகை கடைகளும் இதற்கு உடந்தை.
குருவிகளுக்கும் குருவியை பிடிப்பவர்களுக்கும் அநேக லிங்க் உண்டு. குருவிகள் தங்கள் கொண்டு வரும் தங்கத்திற்கு கப்பம் கட்டி விடுவார்கள். பெயருக்கு ஓன்று அல்லது ரெண்டு குருவிகளை பிடித்து சீன் போடுவார்கள். வெளி நாட்டிலிருந்து சவூதி போன்ற பாலைவனத்திலிருந்து கடும் வெயிலில் கஷ்டப்பட்டு சம்பாத்தித்து மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டுட்டு ஒரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் போக முடியாமல் நம்ம நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஏற்படுத்திக்கொடுத்து, கொஞ்சம் தங்கம் அக்கா தங்கைகள் மகள் கல்யாணத்திருக்கு கொண்டு வந்தால் இந்த குருவி பிடிப்பவர்கள் நம்மை படுத்திடுகிற பாடு இருக்கிறதே கொஞ்சம் நஞ்சம் அல்ல. நான்கு ஐந்து மணி நேரம் விவாதம் செய்து வரி கட்ட வைப்பார்கள் . ஆனால் இவர்களிடம் லிங்க் ல இருக்கும் குருவிகளை கண்ணியமாக பாதுகாப்பாக விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்பி வைப்பார்கள். இதுதான் நம் நாடு.
எனது ஆதங்கத்தை அப்படிடையே வெளிப்படுத்தியமைக்கு நன்றி இதில் என்ன கொடுமையென்றல்ல சுங்கவரி எவ்வளவு என்று சொல்லுங்கள் அதை கட்டிவிட்டு செல்கிறேன் என்றால் அதையும் உடனடியாக சொல்லமாட்டார்கள். கிளி சீட்டு எடுப்பது போல் நமது கடவு சீட்டை திரும்ப திரும்ப பார்த்துவிட்டு அடுக்கி வைத்துக் கொள்வார்கள்
திருச்சி விமான நிலையம் குருவிகளின் சொர்க்கபூமி
குருவிகளை அனுப்புபவர்கள், குறிப்பிட்ட சுங்க அதிகாரி டூட்டியில் இருக்கும் நேரத்தில் வரும் விமானத்தில்தான் குருவிக்கு ரிடர்ன் டிக்கெட் புக் செய்வார்கள்
இவர்களுக்கு மட்டும் மூளை குறுக்கு வழியில் எப்படி வேலை செய்கின்றது என்று புரியவில்லை.