மேலும் செய்திகள்
பொய் சொல்கிறார் ஸ்டாலின் அன்புமணி குற்றச்சாட்டு
28-Sep-2025
மதுரை : பா.ம.க., தலைவர் அன்புமணி மதுரையில் அளித்த பேட்டி: எனக்கு, 100 நாட்க ள் நடைபயண நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். இப்போது, நடை பயணத்திற்கு அனுமதி இல்லை; பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஜனநாயக கடமை ஆற்ற, அவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும்; கட்சிகளை தேடி மக்கள் வரக்கூடாது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது என்பதுதான் நீதிமன்றம் சொல்லும் நிபந்தனை. தனியார் இடங்களில் நடத்தலாம் என்கின்றனர். அப்படியொரு இடம், ஊருக்கு வெளியில்தான் கிடைக்கும். அங்கு பொதுமக்கள் எப்படி வருவர்? ஊழல் செய்து கொள்ளையடித்த கட்சிகள்தான், மக்களை அழைத்துச்செல்ல முடியும். மூன்று ஆண்டுகளில், 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மோசமான மாநிலத்தில், மோசமான ஆட்சியில் நாம் இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கலாம் என, கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு பிறகும், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருக்கிறார். ஏழு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டனர். தமிழகத்தில் மட்டும் அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார் .
28-Sep-2025