உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது என ரயிலில் சென்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மக்கள் சார்பாக நான் நான் கேட்டுக்கொள்வது, ஏ.சி., பெட்டிகளை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு குடும்பம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

samvijayv
ஜூன் 26, 2025 14:12

அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது தமிழகத்தின் சாபக்கேடு என்று தான் கூறவேண்டும்., அது சரி தமிழகத்தில் உள்ள தனியார் பேருந்து கட்டணத்தை முதலில் ஒரு வரப்புக்குள் கொண்டு வாருங்கள் அதன் பின் இதை கேட்க்கலாம்.


Barakat Ali
ஜூன் 25, 2025 20:49

துக்ளக்கார் பேச்சை சீரியஸா எடுத்துக்குறவங்க அவரோட கட்சிக் கொத்தடிமைகள் மட்டும்தான் .... .


Nagarajan S
ஜூன் 25, 2025 19:43

ஏழைகள் உபயோகிக்கும் ரயில் கட்டணத்தை சாதாரண வகுப்புகளுக்கு 500கிலோ மீட்டர் தூரம்வரையும், சபர்பன் எலக்ட்ரிக் ட்ரெயின் வண்டிகளின் கட்டணங்களையும் சீசன் டிக்கெட் கட்டணங்களையும் வரும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தவில்லை. அனைத்து வகை ஏசி வண்டிகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் ஸ்லீப்பர்/படுக்கை வகுப்பு வண்டிகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் மட்டுமே உயர்த்தியுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கட்டணங்களை விடவும், மற்றும் தனியார் போக்குவரத்து கொள்ளை கட்டணங்களை விடவும் ரயில் கட்டணங்கள் மிகவும் குறைவுதான். எதையாவது சொல்லி மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருப்பதுதான் திராவிடமாடல்.


sankaranarayanan
ஜூன் 25, 2025 19:35

ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது என ரயிலில் சென்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் மட்டும் பாலின் விலை ஏற்றலாம் வீடுகளில் பயன்படும் மின்சாரம் ஏற்றலாம் பேருந்தில் செல்வோருக்கு டிக்கெட் விலை ஏற்றலாம் டாஸ்மாக் கடையில் பொருட்களின் விலை ஏற்றலாம் ஆனால் நாட்டிற்கு பொதுவாக பயன்பாடு மத்திய அரசு கொண்டுவந்த எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு ஒரு முட்டுக்கட்டை போட்டேதான் ஆகவேண்டும் எண்ணும் இந்த அரசு கேலிக்கூத்தாகவே உள்ளது


Venkat
ஜூன் 25, 2025 19:22

Mr CM, you please first check what all essential items you have increased in this 4 years before you comment on Railways increasing fare after 5 years. What all you increased in state will not affect the common man, as though only increase in train fare affects common man? you Dont speak.


Anand
ஜூன் 25, 2025 18:19

எல்லாவற்றையுமே எதிர்ப்பது தான் இந்த அறிவிலியின் கொள்கை போய் கணக்கு போட, படிக்க கத்துக்கோங்க


Chess Player
ஜூன் 25, 2025 18:09

அவருக்கு என்ன பேசுறதுன்னு கூட தெரியல. 5 வருஷத்துக்கு அப்புறம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்க இருக்காங்க. தமிழ்நாட்டில், தனிநபர்களுக்கான மின்சாரம், பால் சொத்து வரியை அவர் உயர்த்தியுள்ளார், வணிகத்திற்கான சொத்து வரியை 7 மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளார். பெரும்பாலான இடங்களில் முத்திரைத்தாள் வருவாயை அதிகரிக்க வழிகாட்டுதல் மதிப்பை அவர் அதிகரித்துள்ளார். சில இடங்களில், வழிகாட்டுதல் மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக உள்ளது. அவரது பரிதாபகரமான நிர்வாகம் அப்படித்தான். அரசு பேருந்துகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. அதை தெரிந்து கொள்ள போய் பாருங்கள்.


Chess Player
ஜூன் 25, 2025 18:08

He doesnt even know what he is talking. After 5 years they are increasing 2 paise per Km. His State has increased Electricity, Milk Property tax for Individuals and for Commercial is has increased more than. 7 times. In most places he has increased guidelines value to increase Stamp paper revenue. Some places, guidelines value is more than market value. Such is his pathetic administration. Government buses are in such a pathetic state. Just go and see that to know.


Chandru
ஜூன் 25, 2025 17:06

One more useless, shameless comment from Sudalai


கிருஷ்ணன்
ஜூன் 25, 2025 14:26

தலைவரே அதெல்லாம் டிக்கெட் எடுப்பவர்கள் பிரச்சினை இதில் கழகத்துக்கு சம்மந்தம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை