உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டோஷூட் எடுப்பதில் ஸ்டாலின் முனைப்பு; தமிழகம் குப்பைத்தொட்டி அல்ல என இ.பி.எஸ்., காட்டம்

போட்டோஷூட் எடுப்பதில் ஸ்டாலின் முனைப்பு; தமிழகம் குப்பைத்தொட்டி அல்ல என இ.பி.எஸ்., காட்டம்

சென்னை: கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார். தமிழகம் யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம். கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை.அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார். வளமிகு தமிழகம், யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல. கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வால்டர்
டிச 19, 2024 14:04

கடந்த ஐம்பது வருடங்களில் முப்பது வருடங்களுக்கு மேல் உங்க ஆட்சி தான். இன்னும் இந்த பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கிறதா என்று யாரேனும் கேள்வி கேட்டு விட போகிறார்கள்.


jayvee
டிச 19, 2024 11:28

திராவிடத்திற்கு சம்பந்தமே இல்லாத வைக்கம் விழாவிற்கு செல்லும் முதல்வர் முல்லைபெரியாறு, மருத்துவ கழிவு விவகாரம், கேரளா தீவிரவாத மற்றும் நக்சல் பிரச்சனை, சபரிமலைக்கு தமிழ் ஐயப்ப ..சரி விடுங்க அது ஹிந்துக்களுக்கு எதிரான விஷயம் சந்தோசம்.. பேசாமல் கேரள சுற்றுப்பயணத்திற்கு சென்று வருகிறார்களா ?


சமீபத்திய செய்தி