உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தென் மேற்கு கடலில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே, சுமார் 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 17ம் தேதி காலை, புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே, 35 - 55 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். நேரம் செல்லச் செல்ல, மழையின் அளவும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
அக் 16, 2024 01:07

பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அனைவரும் மாமிச உணவை முழு உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக விலங்குகள் அதிக அளவில் வளர்க்கப்படுவதால், மிக அதிக அளவில் மீதேன் வெளிப்பட்டு, பருவநிலை மாற்றமடைகிறது. கடலில் மீன் இல்லை. விலங்குகள் ஒரே இடத்தில நகரக்கூட இடமின்றி துன்புறுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்ற்ன. மரங்கள் அனைத்தும் வெட்டப்படுகின்றன. விரைவில் சென்னை கடலுக்கு கீழ் போகும் அபாயம் உள்ளது. வாரத்தில் மாமிச உணவை சாப்பிட ஒரு ஆளிற்கு நூறு கிராம் மாமிசம் தான் என்று கட்டுப்பாடு விதிப்பது இந்த உலகை காப்பாற்றும். ஏனனில் கட்டுப்பாடின்றி மக்கள் மாமிசத்தை சாப்பிடுகிறார்கள். இதனால் மனித இனம் அழியும் அபாயம் உள்ளது.


வாசகர்
அக் 15, 2024 23:54

புயலே எங்கள் மக்களுக்கு எந்தவிதமான சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் நல்ல விதமாக கரையை கடக்கவும். ஜெய் ஸ்ரீ ராம், இன்ஷா அல்லாஹ், பரலோகத்தில் இருக்கும் ஆண்டவரே இயேசப்பா. எம் மக்களை இந்த புயல் மழையில் இருந்து காத்தருள வேண்டும். நீங்களே எங்களுக்கு கதி.


புதிய வீடியோ