உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது

பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: நிலத்தை அளவீடு செய்து, கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாக மாற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர், நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தர திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சர்வேயர் பூபதியை அணுகினார்.பட்டாவை மாற்ற லஞ்சம் தர வேண்டும் பூபதி கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமாரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அவர்கள் ஆலோசனைப்படி, விஜயகுமாரி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய பூபதியை அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V RAMASWAMY
ஏப் 17, 2025 08:52

இந்த லஞ்சத்திற்கு, அந்த லஞ்சத்திற்கு கைது என்று செய்தி வந்தால் மட்டும் போதாது. அது அப்படியே அடங்கிப்போய்விடும், அவர்களும் லஞ்சம் கொடுத்து வெளிவந்துவிடுவார்கள், வழக்கம் போல் லஞ்ச வாழ்க்கை தொடங்கிவிடும். நிருபிக்கப்பட்ட லஞ்சம் வாங்கியவர்களுக்கு காலம் தாழ்த்தாமல், உடன் பனி நீக்கம், ஓய்வூதிய நிறுத்தம், ஜெயில் வாசம், கடுமையான அபராதம் இவை ஒட்டுமொத்தமாக கொடுத்து அதனை செய்தியாக அவ்வப்போது வெளியிட்டால் தான் லஞ்சம் வாங்கினால் ஏற்படும் கஷ்டங்கள், அபாயங்கள் புரியவரும், குற்றங்கள் குறைய வாய்ப்புமுண்டு. லஞ்சம் வாங்காதவர்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகைகள், ப்ரோமோஷன் முதலியவை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். ஆனால், எக்காரணத்தைக்கொண்டும் அரசு ஊழியர்களுக்கு தகுதியற்ற பென்ஷனோ, பணி உயர்வோ கொடுத்தால், அதுவும் ஒட்டு வங்கிக்காக கொடுக்கும் லஞ்சமேயாகும். வேலையே செய்யாமல், காலம் கடத்தி லஞ்சக்கொள்ளை அடித்து ஏமாற்றும் இவர்களுக்கு எவ்வித கரிசனமும் கிடைக்க அருகதை இல்லை.


Jayanth Surya
ஏப் 13, 2025 20:47

நாங்கள் 20 மேற்பட்ட குடியிருப்பு மனைகளுக்கு கிராம நத்தம் கூட்டு பட்டா மற்றும் தனிப்பட்ட வாங்க சர்வே டிபார்ட்மென்ட் மற்றும் வீ. ஏ. ஒ அலுவலகத்திலும் அலைந்து ஒரு வழியாக கொடி நாள் காசு என்ற பெயரில் ஒரு பெரும் தொகை கொடுக்கப்பட்டு, கூட்டு பட்டாவில் சேர்த்து,பிறகு தனி பட்டாவாக மாற்ற அறிவுரைப்படி தற்போது தனிபட்டாவுக்கு விண்ணப்பித்து அதற்கான கொடி நாள் காசாக ஒரு பெரும் தொகையை கொடுத்தாகி விட்டது. ஆனால் இன்னும் முறைப்படியான மகள்கள் இதுவரை கிடைக்க பெற வில்லை. அலைந்து கொண்டுதான் உள்ளோம். இவ்வளவு பணம் வாங்கும் ஜென்மங்கள் கடவுளால் திருத்த முடியாது.


mynadu
ஏப் 13, 2025 01:49

என்னது கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாக மாற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் மட்டுமேவா ? திருச்செங்கோடு தாலுகா சர்வேயர் பூபதி இன்னும் வளரனும் தம்பி. சென்னை அசோக்நகர்ல சர்வேயர் சந்தோஷ் எவ்வளவு வாங்குவர் அங்க கேளுங்க அப்போ தெரியும். இவர் கூடவே ஆட்டோ டிரைவர் வைத்து வசூல் வேட்டை நடத்துவார். இவரோட ட்ரைனிங் எடுங்க பாஸ்


Bhakt
ஏப் 13, 2025 01:08

ஏதோ இங்கு ஒன்று அங்கு ஒன்றாக மாட்டுகிறார்கள்.


பாரத புதல்வன் தமிழக ஒன்றியம்
ஏப் 12, 2025 21:31

என்ன செய்கிறார் சர்வாதிகாரி அப்பா? நாளை ஓர் விளக்கத்தை கொடுப்பது பற்றி ஆலோசனை.... லஞ்சம் அல்ல சர்வேயர் வாங்குனது மக்கள் கொடுக்கும் மகிழ்வுடன் வழங்கும் மகிழ்வூதியம் தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது...என அறிக்கை வரும்.


Keshavan.J
ஏப் 12, 2025 21:30

லஞ்ச ஒழிப்பு துறை மினிஸ்டர், MLA மற்றும் கவுன்சிலர் அர்ரெஸ்ட் பண்ணுமா. வெட்கம் கேட்ட துறை . நடிக்கறாங்க.


M S RAGHUNATHAN
ஏப் 12, 2025 20:18

These officials should be summarily dismissed. Let the dismissed persons go to court and prove their innocence. The photos of these persons should be prominently displayed citing the crime for which they are punished. Also, if they have come the quota way, that should also be displayed.


chinnamanibalan
ஏப் 12, 2025 19:42

ஒருபக்கம் தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு வாங்கும் மக்கள். மறுபக்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அள்ளி குவிக்கும் போக்கு. நாடு திசை மாறி போய்க் கொண்டு இருக்கிறது. நேர்மை என்பது எந்த ஒரு இடத்திலும் எள்ளளவும் இல்லை.


Kanns
ஏப் 12, 2025 19:29

Sack & Punish these OverFattened Govt Officials Indulging in PowerMisuses& Loots


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை