கன்னட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுங்க: ராமதாஸ்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், கடந்த மாதம், 29ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூருக்கு காரில் சென்றார். அப்போது, கர்நாடக ரக் ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து மிரட்டி, காரில் இருந்த பா.ம.க., கொடியை அகற்ற சொல்லி மிரட்டியுள்ளனர். அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகம். தனி மனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் துாண்டும் வகையிலும் செயல்பட்டவர்களை, கர்நாடக காவல் துறை கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது .