உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் பலியிடும் வழக்கம்; தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

திருப்பரங்குன்றம் மலையில் பலியிடும் வழக்கம்; தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடும் நடைமுறை உள்ளதாக மூன்றாவது நீதிபதி விசாரணையில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் வெவ்வேறு நிவாரணம் கோரி சில மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்ட உத்தரவு பிறப்பித்தார். மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் நேற்று விசாரித்தார். நீதிபதி: சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆதாரம் உள்ளதா, ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததா. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன்: ஜாதி, மதம், உணவு அடிப்படையில் பாகுபாடு கூடாது. சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளன. அங்கு ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுகிறது. ஒருவரின் மத உரிமையில் மற்றொருவர் தலையிட முடியாது. இவ்வாறு கூறி ஆவணங்களை தாக்கல் செய்தனர். விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

rajinidasan
ஆக 12, 2025 10:56

மாமன் மச்சான் என்று பழகுறாங்க தான, அப்புறம் ஏன் 1991 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் இன்னும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றமுடியவில்லை... குறிப்பு: நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றி வழிபட்ட வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. இது எதனால், யாரால்??? முருகனுக்கு அசைவ வழிபாடு கிடையாது.. அப்படி இருக்கும் போது, அங்கே சென்று பலி கொடுப்பது என்பது இந்துக்கள் மனதை புண்படுத்தாதா?? மாமன் மச்சான் தானே, இந்துக்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று விட்டுக்கொடுக்க மாட்டார்களா?? இந்துக்கள் தான் விட்டுக்கொடுக்கவேண்டுமா????


Delco India
ஆக 13, 2025 06:52

1991 தீர்ப்புக்கு பிறகு 2 முறை மலை உச்சியில் தீபம் ஏற்றக்கூடாது என தீர்ப்பு வந்ததை உங்க ஆர் எஸ் எஸ் ஹிந்துத்துவ அமைப்புகள் உங்களிடம் சொல்லாமல் மறைத்தது ஏன் என்று கேள்வி கேளுங்கள். 1991 தீர்ப்பில் கூட அந்த இடத்தில் கோவிலின் தார்மீக உரிமையை நிலைநாட்டி தீர்ப்பு கொடுக்கவில்லை. பெருந்தன்மைக்காக தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்தார்கள். அன்று கௌமாரக மத கடவுள் முருகன் கோவிலுக்கு முன்பே பின்புறம் உள்ள சைவ மத சிவன் கோவில் இருந்தது. இந்த எல்லா கோவில்களுக்கும் முன்பு சமண மத கோவில் தான் முதலில் வந்தது. அப்போ மலை அவர்களுக்கு தான் சொந்தம்?


Mettai* Tamil
ஆக 12, 2025 09:41

இந்த பிரச்னையும் பிஜேபி யால் மட்டும் தான் முடிவுக்கு வரும் ...


Delco India
ஆக 13, 2025 06:54

இந்த பிரச்சனை வம்புக்கு ஆரம்பித்ததே பிஜேபி தான். அவர்களுக்கு அயோத்தி போலாம் இது ஒரு அரசியல்


பேசும் தமிழன்
ஆக 12, 2025 09:11

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என்ற உண்மையை கோர்ட்டில் கூறுவதற்கு கூட இங்கே பிஜேபி அரசு வந்தால் தான் முடியும் போல் தெரிகிறது.....இன்றைய மாடல் அரசு அந்தளவுக்கு இந்துக்களுக்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள் .....அவர்கள் உண்மையை சொல்வதற்கு கூட தயாராகயில்லை !!!


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 12, 2025 09:02

ஊடகங்கள் ஏன் முக்கியமான விடயங்களை பேச மறுக்கின்றன. அங்குள்ள மக்களே அதனை கண்டுக்காது மாமன் மச்சான் என உரிமை கொண்டாடும் போது இந்த மாதிரி வழக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பது தர்மமல்ல


Svs Yaadum oore
ஆக 12, 2025 09:52

சமூக நீதி மத சார்பின்மையாக அங்குள்ள மக்களை இதை கூடிய விரைவில் கண்டு கொள்ள வைத்து விடுவோம்...மாமன் மச்சான் யார் என்று பிறகு அங்குள்ள மக்களுக்கு புரிந்து விடும் ....அப்பறம் பார்ப்போம் .....


srinivasan
ஆக 12, 2025 08:59

மத்திய அரசு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். இந்த திமுக செய்யும் அநியாயம் எல்லை கடந்து செய்கிறது. மத பிரிவினை செய்து கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள்.


V RAMASWAMY
ஆக 12, 2025 08:55

இந்தியாவே தங்களுக்கு சொந்தம் என்று அரசு செய்த ஆங்கிலேயர்களை விரட்டிய சுதந்திர நாட்டில் காலஞ்சென்ற சட்டங்களுக்கு இடமில்லை அப்படிப்பட்ட சட்டங்களும் காலமாகவேண்டியவை.


Svs Yaadum oore
ஆக 12, 2025 08:35

அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுகிறதாம். வள்ளுவர் சொன்னது ஊண் உண்ணாமை, வள்ளலார் சொன்னது ஜீவ காருண்யம்.. அதை கோர்ட்டில் போய் விடியல் சொல்லட்டுமே ...இவனுங்கதான் வள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்தார்களாம்.. வள்ளலாருக்கு பன்னாட்டு மையமாம் .....வெட்கம் மானங்கெட்டவனுங்க ....


N Annamalai
ஆக 12, 2025 08:25

இஸ்லாமிய அறநிலையத்துறை என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம் .அநியாயத்திற்கு முஸ்லிம்களுக்கு அரசு பேச கூடாது .இந்துக்களை மனிதராகக் கூட மதிப்பது இல்லை .எல்லா இடங்களிலும் கிறிஸ்டின் ,முஸ்லிம்கள் மட்டும் தான் முன் உரிமை .எந்த நாட்டிலும் இருக்காது .சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து தான் செல்ல வேண்டும் .வெட்கப்பட வேண்டும் .


GMM
ஆக 12, 2025 08:18

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் எப்போது இருந்து உருவாக்க பட்டன? ஆடு, கோழி பலியிடும் நடைமுறை எப்போது இருந்து உள்ளது? கருப்பணசாமி கோயிலில் ஆடு, கோழி பலிக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு? நாத்திக மாநில அரசு வழக்கறிஞர்? ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஓட்டுரிமை எல்லோருக்கும் இல்லை. திருப்பரங்குன்றம் பிரிட்டிஷ், முகலாயர் வருமுன் இருந்த வழிபாட்டு ஸ்தலம். சிறுபான்மை வழிபாடு ஸ்தலம் இடம் மாற்ற கூடியது. முருகன் கோயில் ஆன்மிக விதிப்படி இடம் மாறாதது. இந்து மத வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டது. இதன் அருகில் அந்நிய மத வழிபாட்டு இடம் கூடாது?


பேசும் தமிழன்
ஆக 12, 2025 07:21

விடியல் அரசுக்கு ஓட்டு போட்ட இந்துக்கள் இனியாவது விழித்து கொள்ளுங்கள்.. முருகன் கோவில் மலையில் ஆடு... கோழி... பலியிடும் வழக்கம் இருந்ததா என்று கேட்டால்.. பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோவிலில் பலியிடும் வழக்கம் இருக்கிறது என்று விடியாத அரசு கூறுவதா? விடியல் அரசு என்றுமே இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுப்பார்கள்.


சமீபத்திய செய்தி