உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், தமிழகம் இந்தியாவிலேயே 3ம் இடத்தில் உள்ளது.

மிகப்பெரிய சவால்

மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மையம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை இரு கண்களாக செயல்படுத்தி வருகிறோம். காலநிலை மாற்றம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

முன்னோடி

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அலையாத்தி காடுகள் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கிறது. நீர் பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளது. வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. வெப்ப அலையை மாநில பேரிடராக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

krishna
டிச 05, 2024 22:49

ENNA AACHU 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN AVARGALAI KAANA VILLAI.COOLIE CUT AANA SOGATHIL.KAANAVILLAYAA.


ManiK
டிச 05, 2024 21:11

ஆமாம் காவ நிலை மாற்றத்தை தன் தலை மேல் வெற்றிகரமாக் எதிர்கொண்ட தானைத்(தலை)வர் தான் ச்டாலின். என்ன ஒன்னு அதிகமா Fan காற்று அடித்தால் (தலை)காட்டமாட்டார்...ஏன்னா தலைல இருக்கு அந்த காலநிலை ரகசியம்!!.


krishna
டிச 05, 2024 22:46

MANI SIR. SUPER KARUTHU. SIRICHU VAYARU VALIKKUDHU.


ராமகிருஷ்ணன்
டிச 05, 2024 21:06

மழையை வைத்து மத்திய அரசிடம் பணம் வாங்கி சுருட்டுவது திமுகவினர் தான் முன்னோடி, மார் தட்டிக் கொள்ளுங்கள். எங்கும் எதிலும் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது திமுகவினருக்கு கை வந்த கலை.


vbs manian
டிச 05, 2024 20:03

திண்டிவனம் வெனிஸ் நகரம் போல் ஆகிவிட்டது.


Gurumurthy Kalyanaraman
டிச 05, 2024 19:49

காலநிலை மாற்றத்தால் தமிழகம் மிகவும் வெப்ப மயமாகிறது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் தண்ணி கடை திறந்திருக்கிறோம்.


R Kannan
டிச 05, 2024 18:46

Every day for for every failure he is patting himself and his son on the back with blatant white lies.


senthilkumar
டிச 05, 2024 18:29

சாலையில் மரங்கள் இல்லை. நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மத்திய மாநில அரசுகள் துணையுடன் வெட்டப்பட்டது. ஆனால் மறுபடியும் புதிய மரங்களை நட்டு பாரமரிப்பது எல்லாம் எழுத்து அளவில் மட்டுமே உள்ளது. நெடுஞ்சாலைத்துறையை கேட்டால் ஒரு மரம் வெட்டினால் நான்கு மரம் வைப்போம் என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால், நான்கு புதிய மரங்கள் அதே பகுதியில் அல்ல நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில். அது எங்கு இருக்கிறது அங்கு நட்டுள்ள மரங்களுக்கு எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்பதெல்லாம் கடவுளுக்குதான் தெரியும். மேலும், எங்கே புதிய மரங்களை நட்டுவதால் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தின் சூழலியல் எப்படி வளரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் வெற்று வார்த்தைகளையும் கணக்கையும் டென்டர் எடுப்பவர்களும் அதிகாரிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் நெடுஞ்சாலை துறை பணி ஒப்பந்தம் செய்யும் கம்பெனிகள் பெரிய நிறுவனங்கள். ஊடகங்கள் ஆழமாக இதை ஆராயந்து இதில் உள்ள தவறுகளை வெளிக்கொண்டு வர வேண்டும். வெறும் செய்திகளோடு நின்று விடாமல்.. மறுபக்கம், வெப்பமயமாதல் தொடர்பான காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அங்கேயும் அரபு நாடுகள் எண்ணெய் யை தவிர்க்காமல் இருக்க உள்ளடி வேலைகளையும், மாநாட்டை நீர்த்து போக செய்யும் முயற்சியில் உள்ளது. மேலும், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் நிதியை கேட்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு,ஒரே ஆறுதல் விஷியம் சீமான் இயற்கையை பேணுவதில் தனக்குள்ள கனவுகளை அழகாக ஊடகங்களில் சொல்கிறார்.


J.V. Iyer
டிச 05, 2024 17:33

உங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி தலைவரே. யாருக்கு என்றால் கொலை, கொள்ளை செய்பவர்களுக்கு, கையூட்டு வாங்குபவர்களுக்கு, ஏமாற்றுபவர்களுக்கு, ரவுடித்தனம் செய்பவர்களுக்கு, கள்ள சாராயம் விற்பவர்களுக்கு, போதைப்பொருள் விற்பவர்களுக்கு எல்லாம். உங்கள் ஆட்சி பொற்காலம் தலைவா....


தமிழன்
டிச 05, 2024 18:11

காதில் விழவில்லை


Sainathan Veeraraghavan
டிச 05, 2024 16:44

இவர் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஏதோ உளறுகிறார் என்று கடந்து மக்கள் செல்கிறார்கள்


தமிழன்
டிச 05, 2024 18:11

இவர் எங்கே சொல்றாரு.. கேமிரா முன்னாடி எழுதி கொடுத்த செய்தி யை வாசிக்கிறார்..


duruvasar
டிச 05, 2024 16:12

கூச்சமே இல்லாத ஒரு தனி பிறவி.


தமிழன்
டிச 05, 2024 18:12

அப்படின்னா..?


தமிழன்
டிச 05, 2024 18:12

நீங்க தமிழக மக்கள் தேர்ந்து எடுத்த முதல் அமைச்சர்.. முதலே இப்படி என்றால் என யோசிக்கிறீங்க புரிகிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை