உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி காலனி என்ற பெயர் இருக்காது: தெருக்களின் ஜாதி பெயர்களும் மாற்றம்

இனி காலனி என்ற பெயர் இருக்காது: தெருக்களின் ஜாதி பெயர்களும் மாற்றம்

சென்னை: தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு, ஜாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற வேறு பாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட, சமூக அமைப்பை நோக்கி, பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது . அந்த வகையில், 'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், 'காலனி' என்ற சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்.,29ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் தலைமையில், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஜாதி பெயர்களை நீக்குதல், மறு பெயரிடுதல் தொடர்பாக, ஏப்., 1 மற்றும் மே 19ம் தேதிகளில் ஆய்வு கூட் டம் நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள, ஜாதி பெயர் களை நீக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் பணியை துவங்க வேண்டும். இவற்றை, வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர்கள், குறிப் பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இரட்டை வேடம் போடுகிறது அரசு ஜாதி பெயர்களை மாற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு எனப் பெயர் வைக்கிறது. ஜாதி பெயரை மாற்றுங்கள் என்ற உத்தரவு ஒரு புறம்; ஜாதி பெயரில் பாலத்திற்கு பெயர் வைத்தல் மறுபுறம். இந்த முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான் திராவிட மாடல். அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதலில், கோவை அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும், 'ஜி.டி.நாயுடு' பெயரை மாற்றுங்கள். அதேபோல், ஜாதியற்ற சமுதாயம் படைக்க, அமைச்சர்கள், அவரவர் சார்ந்த ஜாதி சங்க விழாக்கள், கூட்டங்கள், மாநாடுகளுக்கு செல்வதற்கு, முதல்வர் தடை விதிக்க வேண்டும். - ராம ரவிக்குமார் தலைவர், இந்து தமிழர் கட்சி

ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுமா?

கோவையில், அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மேம்பாலத்திற்கு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த, இந்தியாவின் எடிசன், ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, அரசு சொத்துக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டப்படி, ஜி.டி., நாயுடு பெயர் சூட்டப்படுமா அல்லது பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

ஆரூர் ரங்
அக் 09, 2025 19:52

காலனி க்கு தமிழில் குடியிருப்பு எனப் பொருள். டாஸ்மாக் நாட்டுக்குக்குள் குடி யிருப்பு?.


Tetra
அக் 09, 2025 15:20

இந்த கேடு கெட்ட ஆட்சி ஜாதி பெயரை எடுத்தால் போதுமா? சிஐடி காலனியில் இவர்கள் ஒழிக்கும் ஜாதிக்காரர்களா இருகாகிறார்கள். அல்லது வீனஸ் காலனியா. கட்டுமானத்தின் வீடல்லவோ உள்ளது. அப்படியானால் அம்மையார் தெரு ஆகி விடும் போல.


GUNASEKARAN
அக் 09, 2025 15:08

Super Chief minister well done!!!!!!! Today cm open GT Naidu flyover at Coimbatore ????!??!


GMM
அக் 09, 2025 13:22

இந்து சமூக அமைப்பு சாதி மூலம். இதில் தவறு, இழிவு இல்லை. மிகை படுத்தி வருவது திராவிட இயக்கம். சிறு பான்மை மதத்திலும் உள்ளன. இது வெட்டி வேலை. பட்டியல் இன மக்கள் இஷ்ட, குல தெய்வ வழிபாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வாக்கு வங்கி ஆலோசனை தான் ஜாதி பெயர் நீக்கும் நெறிமுறைகள். வழக்கில் இந்த உத்தரவு இட ஒதுக்கீடு முறையை தடுத்து விடும். இனி இட ஒதுக்கீடு இல்லாத முதல் மாநிலம் தமிழகமே


Natchimuthu Chithiraisamy
அக் 09, 2025 12:01

முதல்வர் எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பெர்யகளில் உள்ள மதம் சம்பந்தமான கூறியீடுகள் என்ன செய்வது. இந்துக்களுக்கு மட்டும் பிரச்னை உள்ளதா இல்லை அல்லது அணைத்து மக்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்கிறீர்களா ? தமிழ் முஸ்லீம் ராவுத்தர்கள் என்று தெரு பெயர் வைத்துவிட்டால் என்ன செய்ய ?


Mr Krish Tamilnadu
அக் 09, 2025 12:00

பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் கூற சொல்லி வற்புறுத்துவார்கள். கலப்பு மணம் செய்தவர்கள் மதம், ஜாதி இல்லை என கூறினால், அவர்கள் குறிப்பிட்டு ஆக வேண்டும். பிற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடை பெறுகிறது. எல்லாம் ஆட்சிக்கு வந்தபோது செய்த பப்ளிசிட்டி வேலை போல், முடியும் போது சில பப்ளிசிட்டி வேலைகள். பெயர் மாற்றம் அந்த பகுதி மக்களின் வாக்குவங்கியில் பின்னடைவு தரும் என கூறுங்கள் கிடப்பில் போட்டு விடுவார்கள். உண்மையில் மாற்றம் என்பது இனி பெயர் வைக்க கூடாது. பழைய பெயர்களும் ஐந்து ஆண்டுகளில் மாற்றப்படும். ஐந்து ஆண்டு காலக்கெடு வரை பழைய, புதிய பெயர்களை பயன்படுத்தலாம்.அதற்கு பிறகு புதிய பெயர் என்பது தான் சரியாக இருக்கும்.


உண்மை கசக்கும்
அக் 09, 2025 11:57

எந்த அதிகாரிக்கு தைரியம் இருக்கிறது என்று பார்க்கலாம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை பெயர் மாற்ற முடியுமா


தமிழ்வேள்
அக் 09, 2025 11:57

மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் கூறுகையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால்தான் பெயர் மாற்றங்கள் செல்லும் ..அரசு தன்னிச்சையாக மாற்ற முடியாது ..தற்போது ஸ்பெஷல் ஆபீசர்கள் மட்டுமே உள்ளனர் ..முறையான தீர்மானம் நிறைவேற்றாமல் பெயர் மாற்றம் செய்ய முடியாது ..மேலும் , தொல்காப்பியர் , ஆழ்வார்கள் , சங்கப்புலவர் பெயர்கள் இல்லை ...எம்ஜிஆர் ஜெ. பெயர்கள் லிஸ்டில் இல்லை என்பதால் , கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கினால் டோப்பப்பா அரசு என்ன செய்யும் ?


உண்மை கசக்கும்
அக் 09, 2025 11:56

ஆமாம், இவர் குடும்பம் விரும்பி சாப்பிடும் ஹோட்டல் பெயர் காலனி ரெயின் ட்ரீ. சீக்கிரம் பெயர் மாத்துங்க.


உண்மை கசக்கும்
அக் 09, 2025 11:52

அப்ப காலில் போடுவதற்கு பெயர் என்ன.


சமீபத்திய செய்தி