உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம்

டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம்

சென்னை:'டாஸ்மாக்' ஊழியர் மாநில சம்மேளனத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில், 22 ஆண்டுகளாக பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அனைத்து பணியாளர்களையும், பாகுபாடு இல்லாமல், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேரளாவை போல ஒவ்வொரு கடையிலும், விற்பனை கவுன்டர், பணம் வாங்கும் கவுன்டர் ஏற்படுத்தி, விற்பனையை முறைப்படுத்த வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்திற்கு, மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும். சம்பளத்துடன் வார விடுமுறை அளிக்க வேண்டும். மதுக்கடை ஊழியர்களுக்கும் ஓய்வூதிய வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். பணியின் போது மரணம் அடையும் ஊழியரின் வா ரிசுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போரா ட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். உண்ணாவிரத போராட்டத்தில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மணி
ஆக 06, 2025 07:51

கூடுதலா வாங்கும் பத்து இருபது ரூபா பத்தலையா போலி மதுவின் மூலம் வரும் காசு பேதலய ?


xyzabc
ஆக 06, 2025 02:46

நியாயமான கோரிக்கைகள். டாஸ்மாக் தமிழகத்தின் எதிர் காலம். மாடல் ஆட்சியின் வரும்படி பாதை. திருமா கூட ஆதரிப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை