உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று, நாளை வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

இன்று, நாளை வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது. இதனால், வெப்பநிலையும், காற்றில் ஈரப்பதமும் அதிகரித்து, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 இடங்களில் சதம்

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுார், திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி