உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்; கோயில் பூஜாரிகள் வேதனை

ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்; கோயில் பூஜாரிகள் வேதனை

பல்லடம்: ''கோயில் பூஜாரிகளுக்கு தினசரி வழங்கப்படும் 33 ரூபாய் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட போதாது' என கோயில் பூஜாரிகள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் வாசு தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i85ukkl1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 19,000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ளன. இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக 1000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது தினசரி 33 ரூபாய்; இன்றைய விலைவாசியில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இந்த தொகை போதாது. துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலுக்குட்பட்ட கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஓய்வுக்குப்பின் துறை சார்ந்த ஓய்வூதியம், பொங்கல் கருணைக்கொடை, பி.எப்., உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உள்ளன. ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வேலை பார்ப்பவர்கள், 'மாற்றாந்தாய் பிள்ளைகள்' போல் கருதப்படுகின்றனர். பணி நிரந்தரமும் செய்யப்படாமல் பணிக்காலத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான ஊதியமும் கிடைக்காமல் அர்ச்சகர்கள், பூஜாரிகள் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. இவர்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்வதுடன் ஓய்வூதியம், பி.எப்., மற்றும் குடும்ப நல நிதி ஆகிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Thirumal Kumaresan
ஆக 25, 2025 16:42

உடனடியாக ஒரு குடும்பம் நல்லபடியாக நடத்த தேவையான சம்பள வுயர்வை வழங்கவேண்டும்.


Matt P
ஆக 20, 2025 10:52

கோயில் கூடாது என்று சொல்லவில்லை. கோயில் கொடியவர்கள் கூடாரம் ஆகிவிட கூடாது என்று கருணாநிதி சொன்னார். எல்லோரும் வேறு வேலைக்கு போய் விட்டால் கோயிலே கூடாது என்று ஆகி விடாதா?


NALAM VIRUMBI
ஆக 18, 2025 18:36

இப்படி எல்லோர் வாயிலிலும் விழும் அரசு உருப்படுமா? பண்டைய அரசர்கள் கோவில் பூசாரிகளையும் சிப்பந்திகளையும் எவ்வளவு கௌரவமாக நடத்தினார்கள் என்பதை இந்த மூடர் கூட்டம் அறியுமா?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 19, 2025 07:11

அப்போது நல்லாட்சி நடந்திருந்தால் ஏன் அவை இன்று இல்லை? காலத்திற்கேற்ப கல்வியறிவை பெருக்கி நல்ல வேலை பார்க்க வேண்டாமென்று ஒரு தடையும் இல்லையே


N PALANISAMY
ஆக 19, 2025 08:57

அந்த கால அரசர்கள் எவ்வளவு சுய அறிவு உள்ளவர்கள் என்பது, அரசபை கூடியவுடன் அவர்கள் கேட்கும் ஒரு கேள்வியிலேயே விளங்கும் :::மந்திரி, மாதம் மும்மாரி பொழிந்ததா???? மழை பொழிந்தது கூட தெரியாமல் வைத்திருந்துள்ளார்கள்...


Parthasarathy Badrinarayanan
ஆக 18, 2025 17:38

கோவில் ஆணையாளருக்கு கார் கோவில் உண்டியல் கொள்ளையில்.


Arunachalam
ஆக 18, 2025 16:27

Kerala Devaswom board part-time Santhi Archakar Rs.14,800-Rs.22,900/- whereas in Kanyakumari Devaswom Board Tamil Nadu full-time Santhi Archakar Rs.700- Rs.3500/-.


vbs manian
ஆக 18, 2025 15:56

ஏழை அர்ச்சகர் வயிற்றில் அடித்துவிட்டு கோடி கோடியாய் செலவழித்து கும்பிபாபிஷேகம் செய்தால் பாவம்தான் வந்து சேரும். அந்த இறைவனே ஏற்க மாட்டார்.


Abdul Rahim
ஆக 18, 2025 15:46

பெரிய கோவில்களில் பணிபுரிவோருக்கு அதிகமாகவும் சிறிய கோவில்களில் பணிபுரிபவர்களுக்கு குறைவாகவும் வயிறு பசிக்குமா ? பசி என்பது ஒன்றே அனைவருக்கும் அது சமம், பூமியில் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு ஒருவரது சம்பளம் என்பது அவர் மற்றும் அவரது குடும்பத்தின் பசியை போக்கவல்லது இதில் பெரிய சிறிய என்ற பேச்சுக்கே இடமில்லை ஒரு கிலோ அரிசியும் ஒரு கிலோ காய்கறியும் ஒரு லிட்டர் எண்ணெயும் அனைவருக்கும் ஒரே விலையில் விற்கப்படும்போது சம்பளத்தில் மற்றும் ஏற்ற தாழ்வு ஏன் ? சிறிய பெரிய கோவில் பூஜாரிகள் செய்யும் பூஜையை தெய்வம் அளவு வைத்து ஏற்றுக்கொவது இல்லை அனைத்தையும் ஏற்றே அருள் செய்கிறது மனிதன் மட்டும் சக மனிதனின் வாழ்வாதாரத்தில் அளவு வைக்கணும் ?? எனவே சிறிய கோவில்களில் பணிபுரிவோருக்கும் சமமான சம்பளம் வழங்குவதுதான் முறையான செயல்.


Rathna
ஆக 18, 2025 12:54

இங்கே பலர் ஒரு சாதியை சேர்ந்தவர்கள் அங்கே பூஜை செய்கிறார்கள், என்ற நினைத்து கருத்து எழுதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. சுடலை மாடன், பேச்சி அம்மன். ஐயனார், கருப்பண்ண சுவாமி, சாஸ்தா, காளி, அங்காளம்மன், மற்றும் கிராம தேவதைகள் இதில் அடக்கம். 90% இந்த மாதிரி வழிபடும் தெய்வங்கள் தான். இந்த கோவிலில் பூஜை செய்பவர்கள் பலர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த கோவிலுக்கு வருவோர் வருடத்திற்கு ஒரு அல்லது இரண்டு முறையோ தனது குல தெய்வ பூஜைக்கு வருகின்றனர். கிராமங்களில் பண புழக்கம் இல்லாத நிலைமையில் பூஜை செய்பவர்களுக்கு தினமும் 5 ரூபாய் தக்ஷணையாக கிடைப்பதே அதிகம். தானம் செய்யப்பட்ட விவசாய நிலங்கள் முற்காலத்தில் இந்த கோவில்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை கடவுளுக்கு பயந்து படி அளப்பது உண்டு. இப்போது அதுவும் கடந்த 50 ஆண்டுகளில் நின்று போனது. பெரிய கோவில்களில் வரும் தங்கம், வெள்ளி, மற்ற பொருட்களும் அதிகாரிகளில் கண்ணில் இருந்து தப்புவதில்லை. தனியார்கள் அளிக்கும் திருவிழா போன்ற நன்கொடை ஆகியவையும் அதிகாரிகளால், அதிகாரம் உள்ளவர்களால் களவாடப்படும் நிலைமை உள்ளது. பூசாரிகளின், கோவில்களில் ஊழியம் செய்பவர்கள், ஓதுவார்கள், நாயனம் வாசிப்போர் போன்றவர் நிலைமை, கிராமங்களில், சின்ன கோவில்களில் மிக கேவலமாக உள்ளது.


Svs Yaadum oore
ஆக 18, 2025 13:14

அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44000 கோவில்களில் பிராமணர்கள் அர்ச்சகர்களாக உள்ள கோவில்கள் 5000க்கும் குறைவு ...மற்ற கோவில்கள் அனைத்தும் பூசாரிகள்தான்.. ஆனால் படிக்காத விடியல் திராவிடனுங்களுக்கு இது புரியாது.. அதற்கும் மேல் மதம் மாற்றும் கும்பல் மூளை சலவை செய்யும்..


Minimole P C
ஆக 19, 2025 10:34

well said.


Amsi Ramesh
ஆக 22, 2025 18:44

அருமையாக சொன்னீ ர்கள் ..பூசாரிகள் என்றாலே திராவிடனுக்கு அது மட்டும்தான் தெரியும்


venugopal s
ஆக 18, 2025 12:48

அதனால் தான் என்னைப் போன்றவர்கள் அர்ச்சகர் தட்டில் தாராளமாக எங்களால் முடிந்த அளவு தட்சிணை போடுகிறோம். பக்தர்கள் அதிகமாக வரும் பெரிய கோவில்களில் குறைவாகவும், பக்தர்கள் குறைவாக வரும் சிறிய கோவில் அர்ச்சகர்களுக்கு சற்று அதிகமாக கொடுப்பது என்னுடைய வழக்கம்!


Sakthi,sivagangai
ஆக 18, 2025 13:56

எச்சக்கையில் காக்கா ஓட்டாதவர்களெல்லாம் தட்டில் தாராளமாக காசு போடுவார்களாம் அடிச்சிவிடு அடிச்சிவிடு....


வாய்மையே வெல்லும்
ஆக 18, 2025 14:39

புழுகணும்னு முடிவு செய்தபிறகு அளந்துவிடவேண்டியது தானே யார் கேட்கப்போகிறார்கள், நம்பிட்டோம் . இன்னும் பொய்மூட்டைகளை எதிர்பார்க்கிறோம்.


Minimole P C
ஆக 19, 2025 10:35

Keep it up. I also do the same.


Svs Yaadum oore
ஆக 18, 2025 12:47

எதுக்கு சிறுபான்மை நல வாரியம் உபதேசியார்களுக்கு உதவி தொகை வாரி வாரி வழங்குது?? உதவி தொகையை நிறுத்தட்டும். அவனுங்க வேற வேலைக்கு போகட்டுமே? உழைத்து சம்பாதித்து இந்த உபதேசியார்கள் சாப்பிட முடியாதா? இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.... ​


Minimole P C
ஆக 19, 2025 10:36

good question.