வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிளாஸ்டிக்க்கு பதிலாக உலோகபாத்திரங்களை பயன்படுத்தினால் என்ன என்று ஆதங்கப்படுகிறார் ஒரு வாசகர். நல்ல விஷயம் தான். பித்தளைத் தட்டு பித்தளை குவளை மிகவும் சிறந்தது. ஆனால் இப்போது எல்லாமே ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது. எல்லோரும் கைவீசிக் கொண்டு வருகிறார்கள். அவரவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வர வேண்டும். அங்கே எல்லாமே கிடைக்கும் கிடைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்று வருகிறார்கள். இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வியாபார நோக்கத்தில் 100 ரூபாய் வரை தர்ப்பணம் செய்வதற்கு தேவையான பூ பழம் தேங்காய் எள்ளு போன்றவற்றை அங்கே உள்ள கடைக்காரர்கள் தயாராக பிளாஸ்டிக் கூடையில் வைத்துள்ளனர். கூடவே பிளாஸ்டிக் குறையும் தருகிறார்கள். கூடைகளை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும். தர்ப்பணம் செய்வதும் வியாபாரமாகி விட்டது. இது அவர்களுடைய தவறு அல்ல நாம் சிரத்தையாக பித்தளை தட்டு மற்றும் குவளை எல்லாவற்றையும் வீட்டில் இருந்து கொண்டு செல்ல வேண்டும். தர்ப்பணம் செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்தினால் சம்பிரதாயமான எண்ணம் இல்லாமல் பூரண மனதுடன் செல்ல வேண்டும் .அப்போதுதான் அதனுடைய பலன் கிடைக்கும்.
வாழ்க வளர்க சனாதன தர்மம் ...
எவ்வளவோ செலவு செய்கின்றோம். தர்ப்பணம் செய்யும் போது பிளாஸ்டிக்கு பதில் சிறிய உலோக பாத்திரங்களை பயன்படுதத்தினால் நம் முன்னோருக்கு செய்தமுழு பலனும் ஆசியும் கிடைக்குமே.
தர்ப்பணம் செய்வதற்கு புகழ்பெற்ற திருப்புல்லாணி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. இப்படி ஒரு ஸ்தலம் இருப்பது தெரியாதா. ராமநாதபுரம் அருகில் மிக அருகில் திருப்புல்லாணி என்ற வைஷ்ணவ ஸ்தலம் உள்ளது . ராமர் தர்ப்பணம் செய்த இடம். ஆதி ஜெகந்நாத பெருமாள் திவ்ய ஸ்தலம். இங்கு தான் சேதுக்கரை உள்ளது. இலங்கை செல்வதற்கு ராமர் பாலம் கட்டிய இடம். இவ்வளவு சிறப்புமிக்க இடத்தை பற்றி குறிப்பிடவில்லை.
வாழ்க சனாதன கலாசாரம்.