உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளை... எதிர்க்க வேண்டும்! :எட்டு மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளை... எதிர்க்க வேண்டும்! :எட்டு மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'கவர்னர் ரவிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு நீதிமன்றத்திடம் பதில் கேட்டுள்ளார். அதை எதிர்க்க வேண்டும்' என, எட்டு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியை பாதுகாக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmcbxhww&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தனர்.

கண்டனம்

இது தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 14 கேள்விகள் எழுப்பி, அவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதில் முக்கியமாக, அரசியல் சாசனத்தில், ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.இதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்; அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதை எதிர்க்க வேண்டும் என, மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர்களுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அவரது கடித விபரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அரசின் ஆலோசனைபடி கடந்த 13ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் முன், 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு அனுப்பி உள்ளார். இந்தக் குறிப்பு, எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பிடவில்லை. எனினும், கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குவதே இதன் நோக்கம்.தமிழக அரசு பெற்ற தீர்ப்பு, தமிழகத்திற்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தும். இது, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலை நிறுத்துவதாக அமைந்துள்ளது.

வீட்டோ அதிகாரம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநில சட்டசபைகளால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னரால் தடைபடுவதை தடுக்கும் வகையில் உள்ளது. தமிழக கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாம் முறை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது, கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது. ஜனாதிபதி மற்றும் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசியல் அமைப்பின் கீழ், மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில், மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்கிறது. இந்த தீர்ப்பை சீர்குலைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது. பா.ஜ., அரசு தன் சூழ்ச்சியின் முதல் அங்கமாக, ஜனாதிபதியை உச்ச நீதிமன்றத்தில், ஒரு பரிந்துரை பெற அறிவுறுத்தி உள்ளது. இது, அவர்களின் தீய நோக்கத்தை குறிக்கிறது.இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சி தத்துவத்தையும், மாநில சுயாட்சி கொள்கையையும் காத்திடும் நோக்கம் உடைய, பா.ஜ.,வை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநில கட்சி தலைவர்கள், அரசியலமைப்பை பாதுகாக்கும் சட்டப்போராட்டத்தில் இணையவும்.

தலையீடு

உச்ச நீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு, ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பை, நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.நீதிமன்றம் முன், நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இப்பிரச்னையில் உங்களின் தனிப்பட்ட தலையீட்டை உடனடியாக எதிர்நோக்குகிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

D.Ambujavalli
மே 25, 2025 04:10

முதல்வருக்கு இத்தகைய மஹா மேதாவித்தனமான ஆலோசனைகளைக் கொடுக்கும் பிருஹஸ்பதி யாரோ? கேள்வி கேட்பவர் உ. நீ . மந்தத்தை நோக்கி அவர்கள் பல கோணங்களிலும் கேள்விகளை ஆராய்ந்து பதிலளிக்க போகிறார்கள் இதில் இவர் எதற்காக ‘ஹிந்தி வேண்டாம் போடா’ கோஷம் போல கோஷம் போடுவதற்கு மற்ற மாநில முதல்வர்களைக் கூட்டு சேர்க்கிறார்? அவர்களிடம் மட்டும் சட்ட ஆலோசகர்கள் இல்லையா? அவர்கள் இந்தக் கூட்டு எதிர்ப்பை எவ்வளவு தூரம் ஆதரிக்க விடுவார்கள்? எல்லா மாநில வக்கீல்களும் இவர்களுக்கு ஜால்றா தட்டுவார்களா?


Anu Sekhar
மே 22, 2025 22:31

உங்க கிட்ட நாட்டை கொடுத்த மக்களை சொல்லணும்


A1Suresh
மே 19, 2025 22:51

டெவலட்மென்ட்....டெவலட்மென்ட்....டெவலட்மென்ட்....தனது மூளையை சொன்னார் போலும்


Ganapathy
மே 19, 2025 22:31

இவனோட கட்சி ஆளுங்க அரக்கோணத்தில் கல்லூரி பெண்களை கற்பழித்து திருட்டுத்திராவிடிய களவாணிகழகபயலுகளுக்கும் சப்ளை செய்வது இவனுக்கு தெரியாதா? இவனது ஆட்சில அந்த பெண்கள் மீடியாவில் கூறுவது நெஞ்சைப் பிழிகிறது. குமரிகள் கிழவிகள் குழந்தைகள் என யாரும் இவனோட ஆட்சில பாதுகாப்பாக இல்லை. வெக்கங்கெட்ட மானங்கெட்ட தமிழக போலீஸ் எங்கே? தேர்தலில் இவனுக்கு சவ அடி கட்டாயம் மவனே.


RRR
மே 19, 2025 21:15

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள உள்குத்து புரியாத முதலமைச்சர்...


Thiagaraja boopathi.s
மே 19, 2025 20:34

அறிவு என்ன விலை


Sundaran
மே 19, 2025 19:28

ஆட்டம் வரம்புமீறி போகிறது. டாஸ்மாக் வழக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. மக்களை திசை திருப்ப இந்த நாடகத்தை ஆரம்பித்து விட்டார். நீட் தேர்வால் தற்கொலை நடக்கிறது அதனால் அதை நிறுத்த வேண்டும் என்று கத்துகிறார். பத்து பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்த பலர் இப்போது தற்கொலை செய்து கொண்டு உள்ளனரே. இந்த தேர்வுகளையும் தடை செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பாரா திராவிட தலைவர்.


என்றும் இந்தியன்
மே 19, 2025 17:18

மு.... ளின் மூளையில் முன்னூறு பூ மலரும் இப்படித்தான் வள்ளுவரும் இங்கிலீஷில் எழுதி வச்சாரு என்பது போல இருக்கின்றது ஸ்டாலினின் ஒவ்வொரு காரியமும்


Srinivasan Krishnamoorthy
மே 19, 2025 17:03

excellent comment given the situation


M S RAGHUNATHAN
மே 19, 2025 16:08

ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார். நாளைக்கே அவர் வில்சன், கோட் சரவணன், தமிழன் பிரசன்னா, R S பாரதி அவர்களை உயர் நீதி மன்றத்திலோ அல்லது ஆலந்தூர் உரிமையில் நீதி மன்றத்திலோ குடியரசு தலைவர் கேள்விகளுக்கு உச்ச நீதி மன்றம் பதில் தரக் கூடாது என்ற மனு தாக்கல் செய்து தடை ஆணை பெறலாம். இதை கான்ஸ்டன்டைன் ரவி, மனுஷ்ய புத்ரன், மூத்த பத்திரிகையாளர் மணி, ஹிந்து N ராம், அருணன் ஆகியோரும் சேர்ந்து மனு தாக்கல் செய்யலாம். ஸ்டாலின் Indi கூட்டணியில் உள்ள தலைவர்களிடமும் பேசி அந்தந்த மாநிலத்தில் மனு தாக்கல் செய்ய வைக்க வேண்டும். முடிந்தால் குடியரசு தலைவரை உச்ச நீதி மன்றம் Art 142 பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை