உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தகுதித்தேர்வு தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது

தகுதித்தேர்வு தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க, அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும்' என அரசுப் பணியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், 2011 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் எனவும் கூறியுள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெற 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக கற்பிக்கும் ஆசிரியர்களை திடீரென தேர்வு எழுதச் சொல்வதோடு, பணிபறிக்கப்படும் எனவும் கூறியிருப்பது பேரதிர்ச்சி. தொடக்க, நடுநிலை கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய கற்றல், கற்பித்தலில் பல முன்னெடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே பகுதிநேர ஆசிரியர்கள், பணிநிரந்தரம், காலியிடம் நிரப்புதல், மத்திய அரசு நிதி வழங்காதது உட்பட பல சிக்கல்கள் இருக்கும்போது, பணியில் இருப்போருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் வழங்கிய உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணியாளர் யோசனை இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவில் 60 சதவீதம், பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்.டி., பிரிவினர் 40 சதவீதமும் பெற வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்கள் இதில் தேர்ச்சி பெறுவது கடினமாக இருக்கும். தமிழக அரசு 2003 ல் 15 ஆயிரம் தற்காலிக இளநிலை உதவியாளர்களை நியமித்தது. அவர்களை 2006 க்கு பின் தமிழக அரசு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தியது. அவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 25 என நிர்ணயித்து அதனடிப்படையில் தேர்வு நடத்தி அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்தனர். அதேபோல இந்த ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Joseph Daniel santhakumar
செப் 14, 2025 10:48

அரசு ஊழியர்களின் பிரிவு ஏ பிரிவு பி மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவருக்கும் துறை ரீதியான தேர்வுகள் உள்ளன அவற்றில் தேர்ச்சி பெற்றோருக்கு மட்டுமே ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் பதவி உயர்வு உண்டு. தேர்வு பெறாதோர் பணியிறக்கம் செய்யப்படுவர். இத்தேர்வில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இது அனைத்து பிரிவினருக்கும் பொதுவானது. இதில் இட ஒதுக்கீடு இல்லை இது தற்பொழுது நடைமுறையில் உள்ளது என்பது எவ்வளவு பேர் அறிந்த ஒன்று.


N. Ramachandran
செப் 11, 2025 18:08

டாஸ்மாக் அப்பா ... வாழ்க....வாழ்க....வாழ்க.


N. Ramachandran
செப் 11, 2025 18:05

GEN CATEGORY- 10 marks, BACKWARD COMMUNITY- 8 marks, MBC, DENOTIFIED COMMUNITIES - 6 marks, SC - 4 marks, ST - 02 marks. OBC Muslim - 0 Marks, People migerated from Andhra Pradesh especially from Ongole - Upto -10 Minus 10 மார்க்ஸ் வாங்கினால் TNTET பாஸ் என்று சட்ட சபைல சட்டம் நிறைவேற்றலாம். இது இது இது தான் ஓங்கோல் மாடல் ஆட்சி. அப்பா....அப்பா அப்பப்பா....தாங்க முடியல மாடல் லொல்லு...


ganesh kumar
செப் 11, 2025 12:11

நியமனம் செய்வதற்கு முன் தகுதித் தேர்வு என்பதே சரி. 20 ஆண்டுகள் பணி செய்தபின் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. 25 வயதில் தேர்வு வைத்தால், தயார் செய்வதற்கு இருக்கும் மனநிலை, 50 வயதில் இருக்குமா? 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் பதவியில் இருக்கும் காவலர் ஒருவரை 25 வயதினரோடு ஒப்பிட்டு ஓட வேண்டும், குதிக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமாக இருக்குமா? அவரின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சிறப்பாக வேலை செய்வார்கள் என்பது தவறு. பணி நியமனத்திற்கு முன்பு எத்தனை தகுதித் தேர்வும் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் Skill செய்வதற்கு வழி செய்தால் போதுமானது. TET கொண்டு வரப்பட்டதன் மூலகாரணம், வடமாநிலங்களில் எந்த தகுதியும் இல்லாதவர்கள் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்டதே. TET வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் TRB மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. இது சார்ந்த பெரும்பாலானவர்களின் கருத்து தவறு செய்யும் சிலரை மனதில் கொண்டு எழுதப்பட்ட வயிற்றெரிச்சல் பதில்களே. ஆட்குறைப்பு செய்வதற்கான மறைமுக நடவடிக்கைகளே இவை. ஏற்கனவே அரசியல்வாதிகள், நீதிபதிகள், IAS, IPS முதலிய உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பென்சன் உண்டு, மற்றவர்களுக்கு இல்லை என்று கூறிவிட்டார்கள். கவனம் - எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கு அரசு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். ஒரு சட்டம் அல்லது அரசாணை என்பது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்தே அமல்படுத்த வேண்டும். அதை பல ஆண்டுகளுக்கு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது.


Jothilakshmi Muthusamy
செப் 11, 2025 11:16

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்து அதில் பயிற்சி பெற முடியாமல் இருப்பவர்கள் ஏன் ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும். அந்த ஆசிரியர் தகுதி தேர்வு அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற நாங்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாமல் ஏன் பணியில் இல்லாமல் இருக்க வேண்டும்? தகுதி உள்ள எங்களை விரைவில் பணியமர்த்த இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் நல்ல மாணாக்கர்கள் உருவாக்க முடியும். நல்ல எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.


Ramanantham G
செப் 11, 2025 11:09

நல்லாசிரியர் விருதினை இந்த அரசாங்கம் தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதா? இங்கே கலர் காகிதங்களை அள்ளிக் கொடுத்தவனும் நல்லாசிரியர் விருதுகளை பெறுகிறான். தகுதித் தேர்வில் தேர்வு பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களிடம் பயின்ற மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்தவர்களை மறுபடியும் இந்த அரசாங்கம் தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களிடம் பயின்று அதன் பின்னர் தேர்வு எழுதி வந்தால் தான் இது செல்லுபடியாகும் என்று ஆணை பிறப்பிக்க முடியுமா?


Ramanantham G
செப் 11, 2025 10:54

இந்த கருத்தினை பதிவு செய்த நீங்கள் தகுதி பெற்ற ஆசிரியரிடம் இருந்து தான் இத்தனை அறிவு சார்ந்த விஷயங்களை கற்றுக் கொண்டீர்களா? இந்த தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதி பெற்ற ஆசிரியரிடம் இருந்து கல்வி பயின்ற பின்னர் தான் இந்த தீர்ப்பினை வழங்கினார்களா? இந்த அரசாங்கம் கல்வியியல் என்ற பட்டப்படிப்பை தவிர்த்து தகுதி தேர்வு மட்டுமே குறிக்கோளாக கொண்டு தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு இந்த ஆசிரியர் பணியை வழங்க முடியுமா? ஒரு கருத்தை பதிவு செய்யும் முன் இது மாதிரியான விஷயங்களை எல்லாம் ஆலோசனை செய்து பதிவு செய்தால் ஆசிரியர் பணியில் திறமையாக பணியாற்றிக் கொண்டு தகுதி தேர்வு என்ற ஒன்றில் தேர்ச்சி பெறாமலே நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் பணி திறன் பற்றி அரசாங்கம் நல்லாசிரியர் என்ற விருதை எப்படி வழங்கியது. சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு ஆசிரியராக இருந்திருந்தால் இவ்வாறான பதிவினை தவிர்த்து இருப்பீர்கள்.


anantha padmanaban
செப் 12, 2025 12:21

25 வயதில் உடல் தகுதி சான்று பெற்ற காவலர்களை 55 வயதில் அது போன்ற தகுதி எதிர்பார்க்க முடியுமா என்ற கருத்து ஆசிரியர் பணிக்கும் பொருந்தும் சிறப்பான கருத்து அறிவார்ந்த சட்ட சிந்தனை செய்யுங்கள் ஆசிரியர் பணி அறப்பணி அவர்கள் அனைவரும் உயர்த்துவார்கள் அவர்கள் அதே நிலைமையில் தான் இருப்பார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் பணி பறிக்கப்படும் என்ற தீர்ப்பு அவர்களுக்கு மன உளைச்சல் எப்படி ஏற்படுத்தி இருக்கும் என்று உங்களிடம் சிந்தித்துப் பாருங்கள் நல்ல மாணவர்களை நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் 20 வயது 25 வயதில் உள்ள தகுதியினை உணர்த்த தேதி மனதில் மன தைரியத்தினை ஐம்பது இந்த வயதில் எதிர்பார்க்க முடியுமா சற்று சிந்தித்துப் பாருங்கள் அறிவார்ந்தவர்களே


Akbar
செப் 11, 2025 06:25

டாக்டருக்கு படிக்கும் முன் எழுத வேண்டிய தேர்வு நீட் தேர்வு. நீட் தேர்வில் பெயில் என்றால் டாக்டரே ஆக முடியாது.... அதேபோல டெட் தேர்வையும் ஆசிரியர் பணிக்கு வரும் முன்னே வைத்து விடுவது சிறப்பு. நீட் தேர்வே எழுதாமல் 20 வருடங்களாக மருத்துவ சேவை ஆற்றி வரும் ஒரு மருத்துவரை பார்த்து நீங்கள் நீட் தேர்வு எழுதவில்லை எனவே நீங்கள் தகுதியற்றவர் மருத்துவ சேவையை விட்டு விட வேண்டும் என்று சொல்வது எவ்வளவு நகைப்பாக இருக்கும். நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவன் திறமைசாலி அல்ல அந்த தொழிலை செம்மையாக கற்றுக்கொண்டு அதில் திறன் பட செயல்படுபவனே சிறந்த மருத்துவன். எத்தனை டெட் தேர்வு வைத்து ஆசிரியரை தேர்வு செய்தாலும் ஒரு ஐந்து வருட அனுபவம் உள்ள ஒரு ஆசிரியருக்கு அவர் ஈடாக முடியாது அனுபவமே ஒரு சிறந்த ஆசிரியர் தேர்வுகள் ஒருபோதும் சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியாது. டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் தான் டெட் தேர்வு நடத்தும் வினாத்தாளை எடுத்து வருகின்றனர்.


Vishnu
செப் 10, 2025 17:39

பாஸ் ஆக மார்க் 35 என் நிர்ணயம் செய்து பரீட்சை வைக்கும் இவர்கள் ஏன் தான் அவர்களை போல் இருமடங்கு மார்க் எடுத்து காட்டி ஒரு சிறந்த ஆசிரியர் தான் நாங்கள் எல்லோரும் என நிருபிக்கலாமே? சலுகை எதிர்பார்க்கும் இவர்களிடம் நம் பிள்ளைகள் படித்தால் அவர்கள் படிப்பில் எப்படி சிறந்த மாணவராக விளங்குவார்கள். எனவே சலுகை எதிர்பார்க்காமல் மற்றவரோடு தானும் சரி நிகராக பரீட்சையை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


lana
செப் 10, 2025 15:24

50 அல்லது 60 mark எடுக்க முடியாத ஆசிரியர்கள் இடம் படித்து மாணவர்கள் எப்படி neet தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு என்றால் திராவிட இனத்தின் அலர்ஜி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை