உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனவரி 11 வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ஜனவரி 11 வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஜனவரி 11ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: ஜனவரி 11ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 8ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் துவங்கும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு ஜன.,11ல் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளிப்பார். ஜனநாயக கடமையிலிருந்து கவர்னர் ரவி தவறிவிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1l3dvhmh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் ரவி செயல்படுவது நியாயமா? கலவர நோக்கத்தோடு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 3வது ஆண்டாக கவர்னர் இது போன்று செய்து கொண்டிருக்கிறார். யார் சொன்னாலும் அவை மரபுகளை மாற்ற முடியாது. 3ஆண்டாக இதே பிரச்னை தொடர்கிறது. அடுத்த ஆண்டும் கவர்னர் உரையின் போது மரபுப்படியே சட்டசபை செயல்படும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே மரபு. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கவர்னர்களால் பிரச்னை இருக்கிறதா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் இது போன்று பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரிக்கும் உரை தான் கவர்னரிடம் கொடுக்கப்படும். உரையை வாசிக்க விருப்பம் இல்லாமல் கவர்னர் சாக்கு போக்கு சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kumar Kumzi
ஜன 06, 2025 16:23

மிஷநரி கொத்தடிமை தேசத்துரோகம் பற்றி கவர்னருக்கு சொல்லுறான்யா ஹீஹீஹீ


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 16:17

எனக்கு ஒரு Fan club உருவாக்கித் தந்த தினமலருக்கு நன்றி.


Sundar R
ஜன 06, 2025 15:53

சபாநாயகர் சட்டசபையை சரியாக நடத்தாத காரணத்தால் தான் மேதகு ஆளுநர் அவர்கள் சபையை புறக்கணிப்பு செய்தார். சட்டசபையின் நடைமுறை மரபுவழி முறைப்படி மேதகு ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்தை இசைக்கச் சொன்னபோது அதை சபாநாயகர் ஏற்று சட்டசபையில் தேசிய கீதத்தை பாடச் செய்திருக்கலாமே கவர்னர் என்ற Constitution post - ல் இருப்பவர்களை சாதாரணமாக நினைத்து விட்டாரா இந்த சபாநாயகர். மதிப்பை எதிர்பார்ப்பார்கள் ஐயா மாடு மேய்ப்பதற்குக் கூட லாயக்கில்லாதவர்கள் எம்எல்ஏ ஆகலாம். மந்திரி ஆகலாம். ஆனால், சபாநாயகர் பதவியில் இருப்பவர்களை அதுமாதிரி யாரும் குறைகூறி விடக்கூடாது.


M S RAGHUNATHAN
ஜன 06, 2025 14:34

இந்த சபாநாயகர் மரபை பற்றி பேசுவது தவறு. தமிழ்த் தாய் வாழ்த்து 1970 களில் தான் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன் ஆளுநர் உரை ஆரம்பிக்கும் முன்னரும், உரை முடிந்த பின்னரும் தேசிய கீதம் இசைக்கப் பட்டது. நான் இதை நேரில் பார்த்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். மரபை மாற்றியது கருணாநிதி தான். கருணாநிதி கொண்டுவந்த வாழ்த்தும் அவரால் tinkering செய்யப் பட்ட ஒன்று. ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை, சொற்றொடர்களை மாற்றுவது எந்த விதத்தில் நியாயமானது. திமுக பதில் சொல்லவேண்டும். கருணாநிதி என்ற அவர் பெயரை கறுநணிதி என்று திரித்து எழுதினால் அது சரியா? ஸ்டாலின் தயவு செய்து இந்த வாழ்த்துப்பாடலை முழுமை ஆக இசை அமைத்து பாட வைக்கவேண்டும்.


M S RAGHUNATHAN
ஜன 06, 2025 14:10

நிகழ்த்தப் படாத உரை மேல் விவாதம். பின்பு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம். காமடியின் உச்ச கட்டம் .


Murugesan
ஜன 06, 2025 13:23

அயோக்கிய மதமாறி இவனெல்லாம் சபாநாயகராக வருடத்திற்கு ,100 நாட்கள் நடத்துவதும் என்ன ஆனது ,திருட்டு அயோக்கியர்கள்


sankaranarayanan
ஜன 06, 2025 13:21

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் என்று ஒன்று திராவிட அரசுக்கு இருக்கிறதா என்று கேள்வி மக்களிடையே எழுகிறது ஆளுநரின் உரையே இல்லாதபோது அதற்கு நன்றி என்று ஒன்று உள்ளதா சபாநாயகர்தான் அதற்கும் பதில் கூறவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 12:58

நான் சொல்லல ... ஈவேரா சொன்னது ... நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்துவிடுமோ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள் தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள் தனமா?


சசிக்குமார் திருப்பூர்
ஜன 06, 2025 12:52

கருணாநிதி வாழ்க ஸ்டாலின் வாழ்க உதயநிதி வாழ்க இன்ப நிதி வாழ்க அவ்வளவு தான் கூட்டத்தொடர் முடிந்தது. கிளம்பு கிளம்பு


Svs Yaadum oore
ஜன 06, 2025 12:49

விடியல் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று அறிவிப்பு . அப்படி பார்த்தால் நான்கு ஆண்டுகளில் 400 நாட்கள் சபை நடந்திருக்க வேண்டும் ஆனால் வெறும் 119 நாட்கள் தான் நடந்துள்ளது" என்று எதிர்க்கட்சி தலைவர்ந்த லட்சணத்தில் விடியல் ஆட்சி நடக்குது ....இதுக்கு ஒரு பேரவை அதற்கு ஒரு மதம் மாற்றி சபாநாயகர் ...


சமீபத்திய செய்தி