உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னையில் வரும் பிப்., 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது ' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் வரும் 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vkmxtvko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுச்சேரியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தமிழக கடலோர பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கருப்புகுமார்
பிப் 18, 2025 16:01

தமிழகத்தில் எல்லா வீட்டு ரூம்களிலும் ஏ.சி ஓடுது. வெளியில் வெப்பம் ஏறாம என்ன ஆகும்? எல்லோரும் ஏ.சி ரூம்பில போய் உக்காந்துக்கோங்க.


Sivak
பிப் 18, 2025 22:46

எல்லா வீடுகளிலும் மூன்று நான்கு ஏ சி க்கள் ஓடுது ... வெப்பம் வெளியில் அதிகமாத்தான் ஆகும் ... மேலும் எல்லா கார்களிலும் பஸ்களிலும் ரயில்களிலும் ஏ சி ... இன்னும் வெப்பம் நல்ல தூக்கும் .... வேற என்ன செய்யும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை