உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு

தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள், தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது '' என நிருபர்கள் சந்திப்பில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தமிழகம் வந்தார். சென்னை கிண்டியில் நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: அரசியலுக்காக தான் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்; டில்லியை வீழ்த்தியதாக ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது.நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறோம். தாய்மொழியை காப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள். ஆந்திராவுக்கும், தமிழகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. 'நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள்.தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது. 50 சதவீதம் அதிகரிக்கும். சென்னையில் சாலைகள் சரியில்லை, மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!சந்திரபாபு நாயுடு பிரசாரம்; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செ ய்யுங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
ஏப் 21, 2026 18:11

பாஜக அடிமை வேறு எப்படி பேசும்?


vivek
ஏப் 21, 2026 21:46

வீணா போன வேணுகோபால் இருநூறு கொடுத்தால் பேசுவான்


ஆரூர் ரங்
ஏப் 21, 2026 17:37

திராவிட பல்கலைக்கழகம் தெரியுமா? இவரது சொந்த ஆந்திராவில் குப்பம் தொகுதியில் அமைத்துள்ளார். இங்குள்ள கழகங்கள் செய்யாமல் விட்டது.


அப்பாவி
ஏப் 21, 2026 17:24

அடப்போய்யா... ஆந்திராவையே துண்டாடின ஆளுங்க. உருபடுவீங்களா?


T.sthivinayagam
ஏப் 21, 2026 16:53

இதை உங்கள் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கூற வேண்டியது தானே


vivek
ஏப் 21, 2026 21:47

அட வாடகை வாயா. சிவநாயகம் ....நீ முதலில் திருந்து


Easwar Kamal
ஏப் 21, 2026 16:35

அது எல்லாம் சரிங்கோ நேரு மற்றும் வேலு இருவரையும் இன்று வரைக்கும் ED நெருங்க கூட முடியவில்லையே இதற்கு பின்னல் நீங்கள் இருப்பதாக ஒரு பேச்சு ulladahe ? இருவருக்கும் மறைமுகமாக எதுவும் உதவி செய்ய படுகிறதா ? இதை தமிழக மக்கள் கேக்குறார்கள்.


அப்பாவி
ஏப் 21, 2026 14:55

மோடியைத் திட்டி இவர் பேசின பேச்செல்லாம் யுடியூபில் தூசி தட்டிப் பாக்கலாம்.


Narayanan
ஏப் 21, 2026 14:05

படித்ததவர் சந்திரபாபு நாயுடு . விளக்குகிறார் . இல்லை என்று சொல்பவனுக்கு அறிவு வேண்டாம் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்காலாம் . இருக்கு என்பவன்தான் பாவம் அவன் விளக்கவேண்டும் . விளக்கிவிட்டார் . புரிந்துகொள்ளவும் அறிவு வேண்டும் .


elango
ஏப் 21, 2026 13:58

நீங்க யாரு இதற்கு பதில் சொல்லுவதற்கு . அமித்ஷா ஒரு மணி நேரம் கேட்டதற்கு எதற்கு .


ஆசாமி
ஏப் 21, 2026 15:07

மகளிர் மசோதாவில் 33% இல் இருந்து 50% என்று திருத்தம் செய்ய. படிடா பரமா.


V. Rajan
ஏப் 21, 2026 13:42

நாயுடு ஒரு புத்திசாலி முதல்வர் . மத்திய அரசை சரியாக பயன்படுத்துகிறார் . மாநில வளர்ச்சிபெற இந்த வயதிலும் கடுமையாக உழைக்கிறார் . அந்த மாதிரி ஒரு தலைவர் நமக்கு இல்லை.


தமிழ் அவியல் மணியன்
ஏப் 21, 2026 13:24

திரு திராவிடன்ஸ் 70 வருஷமா டிராவிட நாடு, சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு, போன்ற ஊசி போன வடையை சுடும் வேலையை செய்து வருகிறது. கடைகோடி எங்களின் கிராமத்தில் பெட்டி கடை பாட்டி 70 வயது அருமையாக ஹிந்தி பேசுகிறார். ஏனெனில் இங்கே உள்ள அனைத்து தொழிளாளர்களும் வடக்கன்ஸ். டாஸ்மாக் மாநிலத்தில் திரு திராவிடன்ஸ் ஹிந்தி திணிப்பை அருமையாக செய்கின்றனர். இவர்களுக்கு வடக்கன் தயவில்லாமல் எதுவும் அசையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை