உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் என குறைத்து மதிப்பிடுகின்றனர்: திருமாவளவன்

துணை முதல்வர் என குறைத்து மதிப்பிடுகின்றனர்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''என்னை பிரதமர் என்ற அளவுக்கு உயர்த்தாமல், துணை முதல்வர் என்ற அளவில் குறைத்து மதிப்பிடுகின்றனர்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.பார்லிமென்டில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, வி.சி., சார்பில், சென்னை வள்ளூவர் கோட்டம் பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், திருமாவளவன் பேசியதாவது:

அம்பேத்கரை இழிவுப்படுத்தியதில் இருந்து, பா.ஜ.,வின் வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் மீது விமர்சனம் இருந்தால் விமர்சித்து கொள்ளுங்கள்; அதற்கு அவர்கள் பதில் சொல்வர். அம்பேத்கரை அறிவதற்கும், படிப்பதற்கும், அறிவும், ஞானமும் தேவைப்படும். அவரை பற்றி புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஞானமில்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான், அவர் பட்டியலினத்தவர். எப்படியோ படித்து விட்டார்; அதனால், அரசியல் அமைப்பு சட்டம் இயற்ற வாய்ப்பு வந்தது என நினைக்கின்றனர். உயர்ந்த ஜாதியில் படித்தவர்கள் ஏன் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றவில்லை? நீதிமன்றங்களில் சட்டங்களை படித்து வாதடுபவர்களை உயரத்தில் வைத்து பார்க்கின்றனர். அவற்றை எழுதியவர், எவ்வளவு ஆற்றல் படைத்தவராக இருந்திருப்பார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு முன், தேசத்தை பற்றிய எவ்வளவு அறிவு இருந்திருக்கும். அப்போது சட்டம் படித்தவர்கள் பலர் இருந்தாலும், அவர்களால் அரசியலமைப்பு சட்டம் இயற்ற முடியவில்லை.அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், அவரை யாரும் எளிதில் ஏற்கவில்லை. ஆனாலும், பல்வேறு இன்னல்களுக்கு பின், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி, அனைவருக்குமான ஜனநாயக உரிமையை பெற்று தந்தார்.நம்முடைய மாநாட்டுக்கு லட்சக்கணக்கானோர் கூடினாலும் பெரியளவில் செய்தி வெளியிடப்படுவதில்லை. ஆனால், ரசிகர் மாநாடு நடந்தால், ஒரு மாதத்திற்கு செய்தி வெளியிடப்படுகிறது. இது, மீடியாவின் உளவியல். எவ்வளவு கூட்டம் கூடினாலும், அடுத்த முதல்வர் யார் என பேசவில்லை.பிரதமர் என்ற அளவுக்கு என்னைக் குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார்; துணை முதல்வர் பதவி கேட்கிறார் என, குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Narayanan
டிச 30, 2024 13:41

திருமால்வளவன் அமெரிக்காவின் ஜனாதிபதி . இனி எல்லோரும் அப்படியே சொல்லவும் .


Narayanan
டிச 30, 2024 13:39

ஸ்டாலின் ஏற்கனவே செந்தில் பாலாஜி தம்பியை பாதுகாப்பாக வைத்திருக்கிறார் . திருமால்வளவனும் அவரிடம் கேட்டு அவரின் நேரடி பார்வையில் வாழுங்கள் .


kulandai kannan
டிச 29, 2024 19:49

The constitutions of USA, UK, France, Germany etc give their people the rights to 'follow and practice' their religions. But only our constitution gives right to follow, practice and PROPAGATE their religion. This mischief is playing havoc with our demography. High time to bring anti conversion law.


Mohan
டிச 29, 2024 19:48

ஐயா பட்டியலினத்தவரே. என்னைப்போல பல லட்சம் பேர், உங்களைப் போன்ற பட்டியலினத்தவருடன் பேசி, பழகி, ஒன்றாக படித்து, ஒன்றாக வாழ்ந்து, வீடுகளுக்கும், சுப, அசுப நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வாழ்ந்து வருகிறோம். ஒரு கணம் கூட தவறாக பேசியதோ, பழகியதோ இல்லை. ஆனால் இந்த விஷயத்தை சுத்தமாக மறைத்து என்னமோ எல்லோரும் தவறு செய்கிற மாதிரி ஒரு மாயை யை உண்டு பண்ணி இவர்கள் குளிர் காய்கின்றனர். பட்டியலினத்தவரை வெறுப்பவர்களாக இருந்தால் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நாட்டில் பெரும் போராட்டம் நடக்க வேண்டுமே, அது இது வரை நடந்ததில்லை சிறு போராட்டங்கள் வடக்கே நடந்தன பட்டியலினத்தவர் முன்னேற்றத்தை தடுப்பவர் யார்? இட ஒதுக்கீட்டை தமது சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யூம் கட்சியினர் யார்? அவர்களை படிக்க விடாமல் கட்சியில் ஈடுபடுத்தி கெடுப்பது யார்? அம்பேத்கர் கிறித்தவ, முஸ்லீம் மதம் பற்றி சொன்னதை ஏன் மறைக்கிறீர்கள்? காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை தனது "இரத்த சகோதரனுக்காக" தந்த முஸ்லீம் பிரதமர் நேரு எப்படி மனிதருள் மாணிக்கமானார்??. இறைவனை பழித்த பெரியாரை எந்த முஸ்லீமும் ஏற்றதில்லை அம்பேத்கரை 2 முறை தேர்தலில் தோற்கடித்த நேருவின் காங்கிரஸை எப்படி ஏற்க மனம் வந்தது? காங்கிரஸ் உங்களுக்கு உதவும் என எப்படி நம்புகிறீர்?? மோகன்தாஸ் காந்தி இந்துக்கள் அனைவரையும் முஸ்லீம்கள் கொன்றாலும் சகிக்க சொன்ன மனிதன். அவரை எப்படி அண்ணல் என்கிறீர்கள்??? இப்படி முரண்பாடுகளின் இருப்பிடமாக உள்ள விசிகட்சி தனது அரசியல் செயல்பாடுகளை பணபலம் வாய்ந்த கட்சிகளின் நலனுக்காக மடை மாற்றுவது தங்களுடைய கட்சிக்கு வேட்டு வைக்கும் என்பதை இனியாவது உணருமா???


Minimole P C
டிச 31, 2024 08:35

Well said. But for few incidents in a remote village, all educated live in cities never differenciate the listed communities. It is good arugument if majority Hindus are against reservations for SC abd ST, India could have by this time divided on many lines. JUst for living all the times Thiruma talks about ism and because of this the polarities between the listed communities and other communites are growing ever green. Because of Thiruma, the unity between the said two divisions is never possible.


sankaranarayanan
டிச 29, 2024 18:30

பிரதமர் என்ற அளவுக்கு என்னைக் குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என, குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கின்றனர் என்று கூறியவர் கூரை மீது ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர்களெல்லாம் வானத்தில் ஏறி வைகுண்டம்போக முயற்சி செய்தார்களாம் என்பது போல நப்பாசை யாரை விட்டது பாவம் என்ன செய்வது சேர்ந்த கூட்டணியின் மனம் தான் கிடைக்கும்


M Ramachandran
டிச 29, 2024 15:58

திருமாவு முதல்வர் வீட்டருகில் ஒரு டென்ட் அடித்து அங்கேயெ தங்கலாம் . முதல்வர் வரும்போது உள்ளேனைய்யா என்று முகத்தை காட்டி நள்ள பெயர் சம்பாதிக்கலாம். பேட்டி வாங்கும் போது மதிப்பும் உயரும்


Mohan das GANDHI
டிச 29, 2024 15:48

திருமாவளவன் மாவு திமுகக்காரன். அண்ணா கலைக்கழக ரப்பே திமுகவினரால் கொடுமையாக செய்யப்பட்ட்டதே அது பற்றி வாயை திறக்க மாட்டான் இந்த குருமாவளவன் திமுக கொத்தடிமை பெட்டிவங்கி 2 சீட்டுக்கு அலைகிறான் இந்த எழவு ஊழல் திருடன் திருமாவுstupid


குமரன்
டிச 29, 2024 15:37

கூலிக்கு மாறடிப்பவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்


sathiya
டிச 29, 2024 15:02

மிகவும் சரியான கருத்து


veeramani hariharan
டிச 29, 2024 14:37

I think ruling party must have reduced his monthly payment. He started bargaining for it seems


புதிய வீடியோ