உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவையாறு காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

திருவையாறு காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

தஞ்சாவூர்; தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு (இன்று ஆக-3) திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டபத்துறை, காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் என அனைவரும் புனித நீராடி பழங்கள், காதோலை கருகமணி, மாங்கல்யம் உள்ளிட்டப் பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர்.பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆகையால் விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று, காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தினர். சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி, தீபாராதனை காண்பித்து பின்பு பழம், அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர்.மேலும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அந்த நீரால் தானியங்களை தூவி நீருக்கும் நன்றி செலுத்தினர். இதை போல, தஞ்சாவூரில் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடினர். சிலர் தங்களது வீடுகளில் உள்ள குடிநீர் குழாய், கிணறு ஆகிய இடங்களில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 03, 2024 10:45

பூசை போடறோம்னுட்டு கண்டதை வாங்கி தின்னுட்டு குப்பை, ப்ளாஸ்டிக் எல்லாத்தையும் காவிரித்தாய்க்கு எறிஞ்சுட்டு போய்டுங்க. அது அங்கங்கே அடைச்சுக்கிட்டு மழை பெய்யும் போது தண்ணி ஓடாம ஊருக்குள்ளே தண்ணி பூந்து கலெக்டர் வந்து பாக்கலை, மினிஸ்டர் வந்துப்பாக்கலைன்னு கூவுங்க.


Chennaivaasi
ஆக 03, 2024 10:17

லட்சக்கணக்கான கன அடி நீர் திறந்துவிட்டாலும் டெல்டா பகுதிக்கு இன்று வரை நீர் சென்று சேரவில்லை. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் தான் இருக்கின்றன. மொத்த தண்ணீரும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் சென்று சேர்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும். காசுக்கு ஆசை பட்டு வீணாக போன மக்கள்.


chennai sivakumar
ஆக 03, 2024 10:04

எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஓட்டு போடுவது வியப்பாக உள்ளது krackjack biscuit pola


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை