உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா

தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தனித்தன்மையோடு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்தப்போவதாக வாசன் கூறியுள்ளார்.

ராஜ்யசபா எம்பி

ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா கட்சி, கடந்த 2019 ம் ஆண்டு முதல் தேஜ கூட்டணியில் நீடித்து வருகிறது. அதிமுக ஆதரவுடன் வாசன் ராஜ்யசபா எம்பி ஆனார். 2024 லோக்சபா தேர்தலில் இக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதும் தமாகா தேஜ கூட்டணியிலேயே நீடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pcuymdrn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தோல்வி

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமாகா 5 தொகுதிகளில் போட்டியிட்டது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. அப்போ அக்கட்சி நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

செயற்குழுகூட்டம்

இந்நிலையில் சென்னையில் இன்று, தமாகா செயற்குழு கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமாகா அறிவித்துள்ளது.

கூட்டணி தர்மம்

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தமாகா தலைவர் வாசன் கூறியதாவது: எந்த கட்சியாக இருந்தாலும், எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் பல சவால்கள் உள்ளதை நாங்கள் அறிவோம். கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம் என்ற சவால் இருக்கலாம். கேட்ட இடங்கள் கொடுக்கவில்லை என்ற எண்ணமிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி கூட்டணிக்கு, கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டான கட்சியாக செயல்பட்டது தமாகா.

நட்புக்கட்சி

பல்வேறு தொண்டர்கள், பொறுப்பாளர்களை தாண்டி, பல்வேறு சவால்களை தாண்டி கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றியது.தற்போது பாஜ, அதிமுக அதனைசார்ந்த கூட்டணி கட்சிகளோடு எந்த சண்டையும் கிடையாது. தோற்றுவிட்டோம் என சண்டைக் கட்சியாக மாறவில்லை. நட்புக் கட்சியாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தனித்தன்மை

இந்த தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டன. 600 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரின் எண்ணமும், உள்ளாட்சி தேர்தல் வரும் வரை தமாகா தமிழகத்தில் தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பது தான்.தனித்தன்மையோடு தமாகா செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.கூட்டணியில் பொறுப்புகள், குறைவதாக பொறுப்பாளர்கள் கருதுகின்றனர். கூட்டணி அரசியலில் கட்சி வளர்ச்சி குறைவதாக கருதுகின்றனர்.

தேர்தலில் கூட்டணி

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது மாற்றுக் கருத்து இல்லை. அப்போது தான் எல்லா கட்சிக்கும் கூட்டணியில் வலு. தேர்தல் இல்லாத நேரத்தில் கூட்டணி இல்லாமல் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தங்களின் கட்சி பணியை பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட வேண்டும். அதற்கு தமாகா தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் தேஜ கூட்டணியில் மத்தியில் பாஜ, மாநிலத்தில் அதிமுக, மற்றும் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் தமாகா நட்புக் கட்சியாக விளங்குகிறது.

வலுப்படுத்துவோம்

வருங்காலத்தில் தமாகா தன்னை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும், நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் எங்கள் பணியை துவக்குவோம். 12 ஆண்டுகள் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் எங்களின் வலு குறைந்ததாக கருதுகிறோம். காரணம், கூட்டணி கட்சிகள், அதன் சார்ந்த பணிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தனித்தன்மையை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி. அதுவரை கட்சியை பலப்படுத்துவதுஎன செயற்குழு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நேரலை

தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் அளித்த பேட்டி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனை பார்க்க கிளிக் செய்யவும்:https://www.youtube.com/watch?v=VXAbSpXHvpg


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

வில்லிபுத்தூரான்
ஜூன் 16, 2026 10:50

ஐயோ பல கோடி ஓட்டுகள் போய் விடும்..தமாகாவில் வாசன் தவிர பெயர் தெரிந்த ஆட்களும் இல்லை தொண்டர்களும் இல்லை.உங்களுக்கு ,5 கொடுத்ததே அதிகம்.த.மா.கா., மதிமுக ,தேமுதிக, கொ.ம.மு.க. பு.த.,போன்ற சில்லறைகள் படுத்தும் பாடு தாங்க முடியல.


விருமாண்டி
ஜூன் 15, 2026 07:57

தமாகா தாமாக வெளியேறியதா இல்லை வேறு யாராவது விலகி சொல்லி இதை பண்ணையார் செய்கிறாரா? அடுத்த ஸ்டேஷன் தவெக தானே?


பிரேம் குமார்
ஜூன் 15, 2026 06:16

தமிழகத்தில் சுய பலத்தை இதுவரை காட்டாமல் தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ ராஜ்யசபா செல்ல வசதியாக ஆளும் கட்சிகளோடு அல்லது சட்டயன்றத்தில் அதிக இடங்களை கொண்ட கட்சிகளுடன் கூட்டு சேர்வதற்காகவே பலர் தனி கட்சி தொடங்குகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம் அதிமுக ஆதரவில் ராஜ்ய சபா உறுப்பினரான ஜி.கே. வாசன் இந்த பயனாளிகளின் பட்டியலில் தானும் இருக்கிறேன் என்பதை தெளிவாக்கி விட்டார்


Saai sundaramurthy. A.V.K
ஜூன் 14, 2026 23:13

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவருடைய கட்சிக்கு எந்த தகுதியை வைத்து 5 சீட்டுக்கள் கொடுக்கப்பட்டன என்று தெரியவில்லை.......


அப்பாவி
ஜூன் 14, 2026 21:07

எம். பி பதவி முடியப்போகுது.


K Subramanian
ஜூன் 14, 2026 20:21

Please join Annamalai and strengthen his hands so that something good happens with yr help and advice.


SIVA
ஜூன் 14, 2026 20:09

இனிமே ரெண்டு பேருக்குள்ளேதான் போட்டியே ஒன்னு தமாக இன்னொன்னு TVK ....


Anony
ஜூன் 14, 2026 20:01

தனித்தன்மையை இழக்க வேண்டாம். நல்லவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு நன்மை செய்யுங்கள். இப்போதைக்கு அண்ணாமலையைத் தவிர வேறு எந்த நல்லவனையும் தெரியவில்லை. தங்களுக்கு வாழ்த்துக்கள்.


விருமாண்டி
ஜூன் 15, 2026 08:00

இதுநாள் வரைக்கும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குனீங்க, இப்போ அண்ணாமலைக்கு பல்லக்கு தூக்குங்க என்று சொல்றியா? பாவம்லா. அவரூ தவெக போறாரு.


வில்லிபுத்தூரான்
ஜூன் 16, 2026 10:45

இதை சொல்வது அறிவாலயத்தைக் கழுவி விடும் ஆசாமி


Vasan
ஜூன் 14, 2026 19:52

King maker exiting from alliance. Its going to make a turbulence at National level.


Ramesh Sargam
ஜூன் 14, 2026 19:39

பாஜகவுக்கு பெரிய இழப்பு.... அப்படி என்று நான் கூறவில்லை. அப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


விருமாண்டி
ஜூன் 15, 2026 14:22

பாஜக மொத்தமாக முடிஞ்சி போன சோகக்கதை. அண்ணாமலை அதுக்கு மவுத் டு மவுத் மூச்சு கொடுத்து புது ஜென்மம் எடுக்க வைக்க பாக்குறாரூ. பாடை டு பல்லக்கு பாஜக 2.0 மறுபடியும் பாஜக, பாஜக ரிட்டர்ன்ஸ் இப்படி ஏதாவது டைட்டில் கொடுத்து திகிலடையலாம். இப்பல்லாம் பேய்ப்படம் கூட காமெடியாக தான் எடுக்கிறார்கள். அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.


புதிய வீடியோ